த
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
109 |
குற்றமற்றவனே !
வணக்கம். திருமால் நான்முகன் முதலிய (தேவர்களும்) உன்னை அறியமாட்டாத பெருமையையுடைய மலரகிதனே
! வணக்கம். (உன்னை) யான் அறிந்து (வழிபடும்) வண்ணம் முன்னதாக (எனக்கு) அறிவு தந்தருளிய
ஞானசொரூபனே! வணக்கம். குளிர்ந்த தாமரைத்தடங்கள் (அகத்தே) சூழ்ந்த திருக்கருவை யென்னும்
சிறந்த நகரின் கண்ணே களாமரத்தின் நீழலில் எழுந்தருளியிருக்கும் காலகாலனே ! இமயம் என்னும்
பெரியமலை (யரசன் பெற்ற) புதல்வியான ஒப்பனை யம்மைக்கு இனிமைதரும் அன்பனே ! என் தந்தை
யனையானே ! வணக்கம்.
‘நாரணன்
விரிஞ்சன் ஆதியோர் நின் அறியகிற்றிலாப் பெருமை அமல’ என இயைக்க. விரிஞ்சன்-பிரமன்.
அறிய கிற்றிலா-ஈறு கெட்ட எதிர்மறைக் குறிப்புப் பெயரெச்சம் ; அறி-பகுதி, அ-சாரியை, யகரத்தோற்றம்
சந்தி, கில்-ஆற்றலுணர்த்தும் விகுதி ; அனைத்தும் ஒரு பகுதியாய் ‘அறியகில்’ என நின்று துகரச்சாரியையும்
இல் என்னும் எதிர்மறை விகுதியும், ஆகாரச் சாரியையும் கூடி ‘அறியகிற்றிலா’ என்றாயிற்று ;
லகர தகரங்கள் றகரமாகத் திரிந்ததும் உகரக்கேடும் சந்தி. கால காலன்-யமனுக்கு யமனானவன் ;
கூற்றை யுதைத்தமைபற்றிச் சிவபெருமானுக்கு இப் பெயர் வழங்கலாயிற்று : ‘கூற்றுவன் தனக்கோர்
கூற்றுவனாகி’ என்றார் நக்கீரரும். மால் வரை-பெரிய மலை. எந்தை-என் தந்தை என்பதன்
மரூஉ.
இறைவனது திருவுருவம்
சத், சித், ஆனந்தம் என மூன்றென்பர். இவற்றுள் சித் என்பது அறிவாதலால் அவ்வடிவைக்
குறிப்பிட்டு ‘ அறிவ ’ என விளித்தார். அவனை வணங்குதற்கும் அவனருள் வேண்டுதலின், உன்னை அறியும்
அறிவை, உன்னை அறியும் முன் நீயே கொடுத்தருளினை என்பார் ‘ முன்னறிவு தந்த ருளறிவ ’ என்றார்.
இமயம் என்னும் பர்வதராஜன் புதல்வி பார்வதி யாதலால் ‘இமயமால்வரைக் குமரி’ என்றார்.
(94)
|