த
114 |
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
98.
தேவ னே!பிறர்க்
கடிமை யுற்றிலேன் ;
சிந்தை
நின்வசம் தந்த தன்றியும்
நாவி னால்தினம் பரவி
வாழ்த்துவேன் ;
நாளும் என்குறை
தீர்ப்ப தார்கொலோ ?
காவல் மூவரண் கனல்கொ
ளுத்திடக்
கருணை செய்திடும்
கடவுள்! போற்றி.யான்
பாவ காரியே எனினும்
என்னைநீ
பாது காப்பதுன் பண்ப
தாகுமே.
காவல் பொருந்திய
மூன்று புரங்களை நெருப்புப் பற்றும்படி திருவருள் புரிந்த கடவுளே ! வணக்கம். (தேவ) வேதனே !
(யான் நினக்கல்லால்) பிறருக்கு அடிமைப்பட்டில்லேன் ; (என்னுடைய) உள்ளத்தை உன்பாலே ஒப்புவித்ததோடு
(என் நாவையும் உனக்கே தந்து அந்) நாவினால் நாள்தோறும் (உன் திருப் புகழைப் பேசித்) துதித்து
வாழ்த்துகின்றேன் ; (அவ்வாறாக) ஒவ்வொரு நாளும் எனக்கு உண்டாகும் குறைகளை நீக்கி (என்னை
ஆதரிப்பவர் நின்னையல்லால் வேறு) எவர் உளர் ? (ஒருவருமில்லை.) யான் தீவினையேன் ஆனாலும்
நி என்னை ஆதரிப்பது உன் (அருட்) குணத்துக்கு இயைந்ததேயாகும். (ஆதரித்தருள்.)
வசம், ஏழாம் வேற்றுமை
இடப்பொருள்தரும் ஒரு சொல்லுருபு. அன்றியும் என்பதில் உம்மை எதிரது தழீஇய எச்சவும்மை.
பரவல்-முன்னிலைப்படுத்திப் புகழ்தல். நாளும், என்பதில் உம்மை முற்றும்மை. யாவர் என்னும்
வினாவினைக் குறிப்பு ஆர் என மரீஇயது. கொல், ஒ,-அசைநிலை. காவல்மூவரண்-உருபும் பயனும் உடன்தொக்க
தொகை. பண்பது-பண்பு; அது பகுதிப்பொருள் விகுதி.
‘பிறர்க்கடிமை
யுற்றிலேன்’ என்றதால் உனக்கடியனாயினேன் என்றா ராயிற்று. எனவே காயத்தால் உனக்குத் தொண்டு
|