புறன
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
119 |
புறனடை
_____
இந் நூலகத்துச் சுட்டப்பட்ட
புராண வரலாறுகள்.
_____
காப்புச் செய்யுள்.
விநாயகப் பெருமானுக்கு யானைமுகம் வந்த வரலாறு: கயமுகாசுரன் தேவர்களாலும் பூதங்களாலும்
மனிதர்களாலும் மிருகங்களாலும் ஆயுதங்களாலும் இறவாதிருக்கச் சிவபெருமானிடம் வரம் பெற்றிருந்தான்.
அப் பேற்றால் அகந்தை கொண்டு அவன் தேவர்களைப் பெரிதும் துன்புறுத்துவா னாயினான். அதனைப்
பொறுக்கலாற்றாத தேவர்கள் சிவபெருமானைச் சரணடைந்து தமது துன்பத்தையெல்லாஞ் சொல்லி முறையிட்டனர்.
அடைந் தாரைப் புரந்தருளும் அருட்பெருந்தகையாளராகிய சிவபெருமான் தேவர்களுக்குத் தேறுதல் கூறி
அவர்களை அனுப்பிவிட்டுத் தாம் பார்வதிதேவியாருடன் கைலை மலைச் சாரலில் அணிமலர்ச் சோலையகத்த
தாயதொரு திருமணி மண்டபத்துக்கு எழுந்தருளினர். ஆண்டொரு சித்திரச் சுவரில் தீட்டப்பட்டிருந்த
சித்திரங்களை அண்ணலுந் தேவியுங் கண்ணுற்றுச் செல்லுங்காலைப் பிரணவமந்திரம் ஒரு சித்திரமாய்
வரையப்பட்டிருக்கக் கண்ட சிவபெருமான் யானைமுக வடிவிற்றாய அவ்வோங்காரத்தைக் கயமுகாசுரனைக்
கொன்று தேவர்களைக் காத்தருளும் திருக்குறிப்புடன் நோக்குவாராயினர். அவ்வளவிலே அவ்
வோங்காரம் களிறும் பிடியுமாய்ப் பிரிந்துகூட அக் கூட்டத்தின் விளைவாக
விநாயகப் பெருமான் யானைமுகத்துடன் தோன்றிக் கணங்களுக்குத்
தலைமை பூண்டு கணபதியாய்க் கைலாயத்தில் அமர்ந்தருளித் தேவர்கள்
குறைதீர்க்கக் கயமுகாசுரனோடு போர்புரிந்து, ஆயுதங்களால் அவன
|