த
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
25 |
கிக் கண்களினின்றும்
ஆனந்தபாஷ்பஞ் சிந்தவும் ‘திருக்கருவையி லெழுந்தருளிய பெருமானே ! எல்லாப் பொருளையுங் கடந்து
நின்றவனே!’ என்று எனது நாத் துதிக்கவும் புண்ணியஞ் செய்தேன். இந்தப் பெரிய செல்வம்
நிலவுலகத்தில் அடைவார் (வேறு) எவர்? (எவரும் பெறலரிது).
மகுடம்-கிரீடம்.
இறைஞ்சும்-வணங்கும். விரை-வாசனை. சே அடி-செவ்விய அடி. மிசை-மேல். உள் நிறை காதல்
அன்பு-உள்ளம் நிறைவுற்ற காதலாலும் அன்பாலும். பேறு-செல்வம்.
விண்ணவர்
மகுடகோடி-மகுடகோடி விண்ணவர் என இயைத்துப் பொருள்
கொள்க.
(18)
19.
பெறுவது நினது
திருவடிக் கமலம்;
பேசுவ
துன்திரு நாமம் ;
உறுவது நினது திருவுரு
வெளியாம் ;
உணர்யாஙன்
அருள்: அலா துண்டோ?
மறுவறு சிறப்பின்
மாசிலா மணியே !
வரதனே !
சிவபெரு மானே !
குறுமுனி பரவக்
களாநிழ லமர்ந்த
கொடிமதிற்
கருவையா திபனே !
குற்றமற்ற
சிறப்பினையுடைய கழுவிய மாணிக்கம் (போல்பவனே)! (அடியார்களுக்கு வேண்டிய) வரத்தைக்
கொடுப்பவனே ! சிவபிரானே ! அகத்தியர் வணங்கக் கொடி கட்டிய மதில் சூழ்ந்த
திருக்கருவைப்பதியில் திருக்களா நிழலின்கீழ் எழுந்தருளிய இறைவனே ! (அடியேன் சரணமாகப்)
பெறுவது உனது திருவடியாகிய தாமரையையே; நான் (புகழ்ந்து) பேசுவது உனது திருநாமத்தையே ; நான்
பிறவிமுடிவில் அடைவது உனது திருவுரு
|