பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

45

36. இறைவன் எங்கணும் யாவையும் ஆனவன்
        பிறைய ணிந்த சடிலன் பெருந்தகை
    கறையி லங்கு மிடற்றன் கருவையான்
        மறைய நின்றெனை ஆண்டதெம் மாயமே.

    உயிர்களுக்கு இறைவனாயுள்ளவனும், எவ்விடத்தும் எப்பொருளும் ஆனவனும், பிறைமதியை யணிந்த சடாமுடியை யுடையவனும், உயிர்கட்கருளும் பெருந்தன்மையை யுடையானும், (தேவர்களுய்ய உண்ட) விடம் விளங்கிய திருக்கண்டத்தை யுடையவனும், திருக்கருவைப் பதியில் எழுந்தருளி யுள்ளவனுமாகிய இறைவன் தான் மறைய நின்று என்னை அடிமை கொண்டது என்ன இந்திரசாலம்!

    சடிலன்-சடையை உடையவன். பெருந்தகை-பெருந் தன்மையுடையவன். கறை-களங்கம் (விடம்). இலங்கு-விளங்கு.
மிடற்றன்-கழுத்தன்.

    தேவர்கள் உய்யும்பொருட்டு உட்கொண்ட விடத்தால் உண்டான கறையாதலால், அஃது அவனது அருட்பெருந்தன்மை விளங்கநின்ற தென்பார் ‘ பெருந்தகை, கறையிலங்கு மிடற்றன் ’ என்றார். யாண்டும் வியாபித்து நின்றும் வெளித்தோற்றாது நிற்பதும் அங்ஙனம் மறையநின்று என்னையாண்டதும் பெருவியப்பென்பார் ‘மறையநின்றெனையாண்டதெம் யாயமே ’ என்றார்.

(36)

37. மாய வல்லிருள் நீங்க மனத்திடைத்
        தூய ஞானச் சுடர்விளக் கேற்றிய
    நாய கன்கள வீசன் நரைமயிர்
        பாய மால்விடை யான்பர மேட்டியே.

    மாயமாகிய கெடாத இருள் நீங்க, என் மனத்தினிடத்துப் பரிசுத்த ஞானமாகிய ஒளிவீசும் விளக்கினை ஏற்றியருளிய இறைவனாவான், திருக்களா நீழலில் எழுந்