பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

53

    இதழி-கொன்றை. தேன்+மாலை=தேமாலை ; மெலிவுர இறுதி அழிந்தது. வம்மின்காள்-வாருங்கள்; (மின்-ஏவற்பன்மை விகுதி ; கள்-விகுதிமேல் விகுதியாய் வந்து ஈற்றயல் நீண்டு விளியுருபாயிற்று.) நமரங்காள்-நம்முடையவர்களே; (நாம் என்பது முதல் குறுகிநின்ற நம் பகுதி ; அர்-பலர் பால் விகுதி ; அம்-சாரியை; கள் விகுதிமேல் விகுதியாய்வந்து ஈற்றயல் நீண்டு விளியுருபாயிற்று.) சிவபெருமான் புகழைப் பாடியாடுதல் தமக்கின்பஞ் செய்தலின், ‘நமரங்காள் வம்மின்’ என்று பிறரையும் அதுசெய்ய அழைக்கின்றார், ‘ தாமின் புறுவ துலகின் புறக்கண்டு-காமுறுவர் கற்றறிந் தோர்’ ஆகலின்.

(44)

45. தொண்டுசெய்து வழிபட்டுச்
        சுருதிபுகழ் களாவீசன்
    புண்டரிக மலர்த்தாளைப்
போற்றிமுதற் பேறுபெற்றார்
    அண்டர்பிரான் நான்முகத்தோன்
        ஆழியான் இவரென்றால்
    மண்டனிஞா லத்தெளிய
        மானுடரோ வழுத்துவார்!

    வேதம் புகழும் திருக்களாநிழலில் எழுந்தருளியிருக்கும் இறைவனது தாமரைமலரை யொத்த திருவடியை வணங்கித் திருத்தொண்டுசெய்து பூசித்து முன்பு (பதவி அதிகாரமுதலிய பலவகையான) பயன்களைப் பெற்றவர்கள் தேவர்களுக்குத் தலைவனாகிய இந்திரனும், நான்கு முகங்களையுடைய பிரமனும், (சுதரிசனமென்னும்) சக்கரத்தையுடைய திருமாலுமாகிய இவர் களானால், மண்ணாலான ஒப்பில்லாத நிலவுலகத்துள்ள வலியில்லாத மக்கட் பிறப்பினரோ அவன் திருவடிப் புகழைப் பேசுதற்கு அருகர் ! (அல்லர்).