த
56 |
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
நீ இனியும்
தாமதியாமல் என்னைக் காக்க உன் திருவருட்புணையை எனக்கு அளித்தருள் என்பார் ‘புரக்க இரக்க
மின்னந்தோன்றாதா’ என்றார். ‘கவிழ்ந்து’ என்பது பாடமாயின் கவிழ என்னும் வினையெச்சத்
திரிபாகக் கொள்க. நடுக் கடல்-கடல் நடு, இலக்கணப் போலி.
(47)
48.
தோன்றியபோ துடன்தோன்றித்
தோன்றாது மறைத்தென்னை
ஆன்றசெழுஞ்
செம்பிலுறை
களிம்புபோல் அகலாமல்
ஊன்றுமலத்
துகளகற்றி
உன்
அருளும் பெறுவேனோ ?
மூன்றுலகுந்
தொழுதேத்தும்
முகலிங்கா ! முதற்பொருளே !
மேல் கீழ்
நடுவான) மூன்றுலகமும் வணங்கித்துதிக்கும் முகலிங்கனே! அனைத்தினுக்கும் முதலாயுள்ளவனே! யான்
தோன்றியபோது, பொருந்திய செழுமையான செம்பில் களிம்புபோல், என்னுடன் தோன்றி,
யான்தோன்றாமல் என்னை மறைத்து (என்னைவிட்டு) நீங்காமல் அழுந்திய மலக்குற்றத்தை
யொழித்து, உனது திருவருளும் பெற்றுய்வேனோ? (யானறியேன்.)
துகள்-குற்றம்.
செம்பிற் களிம்புபோல் மலம் ஆன்மாவை அனாதியே பற்றி யுள்ளதென்பது,
நெல்லிற்
குமியும் நிகழ்செம்பி னிற்களிம்பும்
சொல்லிற்
புதிதன்று தொன்மையே-வல்லி
மலகன்ம
மன்றுளவாம் வள்ளலாற் பொன்வாள்
அலர்சோகம்
செய்கமலத் தாம்’
எனவருந் திருவாக்காற்
பெறப்படும்.
(48)
|