த
110 |
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
95.
எந்தை யாயினாய்
! குரவன் ஆயினாய் !
இறைவன் ஆயினாய்
! போற்றி. என்மனப்
பந்தம் ஆயினாய்
! வீடும் ஆயினாய் !
பரமும் ஆயினாய்
! போற்றி. தென்புலச்
சந்த மால்வரைத்
தமிழ்மு னிக்கு(உ)மை
தனைம ணந்தமெய்க்
கோலம் காட்டினாய் !
சுந்த ரப்புயத் தழகு
போற்றி.நற்
சோதி !
பால்வணத் தாதி ! போற்றியே.
எனக்குத் தந்தை
ஆனவனே ! (எனக்கு) ஆசிரியன் ஆனவனே ! (எனக்குத்) தலைவன் ஆனவனே ! வணக்கம். என் மனத்துக்குப்
பற்றுக்கோ டானவனே ! (மனப்பற்றற்ற) முத்தியும் ஆனவனே ! (பற்றும் முத்தியுமான அவ்விரண்டையும்
தரும்) மேலோனும் ஆனவனே ! வணக்கம். தென்திசையில் உள்ள சந்தனமரம் (செறிந்த) பெரிய
(பொதிய) மலையில் அமர்ந்த தமிழ்முனிவராகிய அகத்தியருக்கு உமாதேவியைத் திருமணஞ் செய்தருளிய
(உனது) உண்மைத் திருக்கோலத்தைக் காட்டியருளினவனே ! (உனது) திருப்புயங்களின் அழகு புகழப்படுவதாக.
நல்ல சோதியே ! பால்வண்ணனான முதல்வனே ! வணக்கம்.
குரவன்-ஆசிரியன்;
‘அரசன், உவாத்தியான், தாய், தந்தை, தம்முன்’-இவ்வைவரும் ஐங்குரவர் எனப்படுவர் ; குரவராவார்
வழிபாடு பெறத்தக்க பெரியோர்; இச் சொல் ஆண்பாலீற்றதாய் வருமிடத்து ஆசிரியனையும், பலர்பால்
ஈற்றதாய் (ஐந்து என்னும் எண்ணடைபெறாது) வருமிடத்துத் தாய்தந்தையரையும் குறித்தல்
பெரும்பான்மையான வழக்கு ; ‘ குரவனை வணங்கக் கூசிநின்றோனும் ’ ‘குரவர்தாம் இயைந்து கொடுத்திலராயின்
’ என்பன எடுத்துக்காட்டு. பந்தம்-பற்று ; வீடு-முத்தி (பற்றுக்கு மறுதலை); பரம்-மேலானது. ‘
பற்றாயதன்றி அப் பற்றுக்கு மறுதலையுமாகி
|