பக்கம் எண் :

28

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

மூன்றாம் பத்து

முதற்சீர் மாச்சீராகவும் கடைச்சீர் காய்ச்சீராகவும் இடைச்சீர் நான்கும் விளச்சீர்களாகவும் வந்த

அறுசீர் ஆசிரிய விருத்தம்.

21. காத லுற்றிட மனநிலை பெற்றிடக்
        கனிந்திடக் களிகூரப்
    போத முற்றிட யான்என தென்றிடும்
        புலைச்செருக் கறமாற
    நாதன் முத்தமிழ்க் கருவையம் பரன்என
        நாத்தழும் புறஓதி
    ஓதி மற்றுநான் பெற்றதை இற்றென
        உரைத்திட முடியாதே.

    (நின்திருவடிமீது) ஆசை மீதூரவும், (அதனால்) எனது மனம் (திருவருள்) நிலையில் நிற்கவும், (அதனால் அம் மனம்) கனியவும், (அக்கனிவால்) ஆனந்தக் களிப்பு மிகவும், (அக் களிப்பால் சிவ) ஞானம் முற்றவும், (அச் சிவஞான முதிர்ச்சியால்) யான் எனது என்றகங்கரிக்கும் பொல்லாங்கு செய்யும் மயக்கம் முழுவதும் அகலவும் ‘இறைவனே ! (இய லிசை நாடகமென்னும்) முத்தமிழ் வழங்குந் திருக்கருவையி லெழுந்தருளிய பரனே !’ என்று நாத்தழும்புறத் துதித்துத் துதித்து, நான் பெற்ற பேற்றை இத்தன்மைத்தென்று எடுத்துக் கூற வரையறைப்படாது.

    காதல்-ஆசை. போதம்-அறிவு. புலை-பொல்லாங்கு. செருக்கு-ஆணவ மயக்கம். அற மாற-முழுவதும் அகல. இற்று என-இப்படிப்பட்டதென.

    ஆசையாவது பற்றுள்ளம். நிலையான பொருளைப் பற்றுவது தானும் நிலை பெறுமாதலால் ‘காதலுற்றிட மனநிலை பெற்றிட’ என்றும், திருவருட்கிலக்காகி நிலைபெற்ற மனம் சூரிய வெப்பத்