பக்கம் எண் :

789

பரத்துவாசர் முதலானோர்க்கு ஸ்ரீராமர் ராட்சதர் மாண்டவகை கூறல்

விருத்தம்-118 தரு-96

(மிகைப்பாடல்கள்-மீட்சிப்படலம்)

பரிகலத் தமுதுஏந்தியே பந்திகள் தோறும்
இரவி காதலற்கு அங்கதற்கு இலங்கையர் வேந்தற்கு
உரிய வீரர்கட்களித்துத் தானவர்களோ பாதி
வரிசையால் உண்ணமாமுனி விருந்தும் உண்டனரால்

     (சங்கிரகராமாயணம் 102-33 to 102-62 வரை உளது கண்டுகொள்க)

குகன் ஸ்ரீராமர் வரவில்லை என்று வருந்துதல்

விருத்தம்-119 திபதை-19

(மிகைப்பாடல்கள் மீட்சிப்படலம்)

மான்நேர் விழியாளுடனே வனம்முன்
போனான் ஒருநாள் வரும்நாள் இலதோ
தேனே அமுதே தெளிவே தெளிவின்
ஊனே உயிரே உலகாளுடையாய்                     44-2

அம்பவளச் செவ்வாய் அனிகடகச் சேவகன்
வம்பவிழும் சோலைக் கோசலை நாடுடைவள்ளல்
எம்பெருமான் என்னை, இழிகுலத்து நாயேனைத்
தம்பி எனஉரைத்த தரசரதி தோன்றானோ              44-3

வாழிமலைத் திண்டோள் சனகன்தன் மாமயிலை
ஏழுலகும் ஆளும்இறைவன் மருமகளைத்
தாழ்வில் பெருங்குணத்தாள் தான்உன் கொழுந்திநீ
தோழன் எனஉரைத்த தோன்றலார் தோன்றாரோ         44-4

துங்க விற்கரத் தோளினார் சொன்னநாள்
இங்கு வந்திலர் யானிறப்பேன் எனா
மங்கை மாரும் படையும் வன்சுற்றமும்
அங்குநீர்க் கங்கையின் அம்பியில் ஏற்றினான்           44-5

வேதநாதனும் வில்லியும் விரைமலர்த்திருவும்
ஏதுசெய்யினும் என்னுயிர் முடிப்பென் எண்றெண்ணி