பக்கம் எண் :

அழகர் கிள்ளைவிடு தூது39


20 நட்டா ரெனினும் நடந்துவரும் பூசைதனை
விட்டார் முகத்தில் விழித்திடாய்-வெட்டும்இரு
வாளனைய கண்ணார் வளர்க்கவளர் வாயுறவில்
லாளனைநீ கண்டால் அகன்றிடுவாய்-கேளாய்
இருவடிவு கொண்டமையால் எங்கள் பெரிய
திருவடிகள் வீறெல்லாஞ் சேர்வாய்-குருவாய்ச்
செபதே சிகர்க்கெல்லாந் தென்னரங்கர் நாமம்
உபதேச மாக உரைப்பாய்-இபமுலையார்
சித்தங் களிகூரச் செவ்விதழில் ஆடவர்போல்
முத்தங் கொடுக்க முகங்கோணாய்-நித்தமவர்
20 செவ்விதழுன் மூக்காற் சிவந்ததோ உன்மூக்கில்
அவ்வித ழின்சிவப்புண் டானதோ-செவ்வியிழந்
தண்டருக்குந் தோற்றா அடல்வேளா னானைநீ
கொண்டிழுத்தால் ஆகுங் குறையுண்டோ-உண்டடக்கி
ஆயுவை நீட்ட அருந்தவத்தோர் பூரகஞ்செய்
வாயுவையுன் பின்னே வரவழைப்பாய்-தேயசொளிர்
மைப்பிடிக்கும் வேற்கண் மலர்மாதுஞ் சங்கரியும்
கைப்பிடிக்க நீவங் கணம்பிடித்தாய்-மெய்ப்பிடிக்கும்
பச்சைநிறம் அச்சுதற்கும் பார்ப்பதிக்கு முன்றனக்கும்
இச்சைபெற வந்தவிதம் எந்தவிதம்-மெச்சும்
25 குருகேயுன் னாக்குத்தான் கூழைநாக் கான
தரிகீர்த் தனத்தினால் அன்றோ-தெரிவையர்கள்
ஆர்த்தவிரல் உன்முகமொப் பாகையா லேகையைப்
பார்த்து முகமதனைப் பாரென்பார்-சீர்த்திக்
கிரியையிலே காணுங்காற் கிள்ளை அடையாத
பெரியதனம் வீணன்றோ பேசாய்-தெரியுங்கால்
தேறுகனி காவேரி சிந்துகோ தாவிரியும்
வீறுபெறு மேநீ விரும்பினாற்-கூறில் அனம்
உன்னுடைய வூணன்றோ ஊதப் பறந்துபோம்
சின்னவடி வன்றோ செழுங்குயிலும்-என்னே