35 | முதுவண் டினந்தான் முடிச்சவிழ்த் தாலும் மதுவுண்டாற் பின்னைவா யுண்டோ-எதிரும் கரும்புறா வார்த்தை கசப்பென்று சொல்ல வரும்புறா வுக்குமொரு வாயோ-விரும்புமயில் உற்ற பிணிமுகமே உன்போற் சுகரூபம் பெற்ற பறவை பிறவுண்டோ-கற்றறியும் கல்வியுங் கேள்வியுங் கைக்கொண்டாய் சாரிகைக்குன் செல்வமதி லள்ளித் தெளித்தாயோ-சொல்வேத மென்பரிநா லுக்கும் விதிசா ரதிவில்வேள் தன்பரி யேயுனக்குச் சாரதியார்-வன்போரில் |
40 | மேவுஞ் சிவன்விழியால் வேள்கருகி நாண்கருகிக் கூவும் பெரிய குயில்கருகிப்-பாவம்போல் நின்று மறுப்படுநாள் நீதா னடுப்படையிற் சென்று மறுப்படா தேவந்தாய்-என்றுமாக் காய்க்குங் கனியல்லாற் காய்பூவென் றாறாக்கு மூக்கு மறுப்பாய் முகம்பாராய்-ஆக்கம் வரையாமல் நன்மை வரத்தினை நல்கும் அரிதாளை நீவிட் டகலாய்-இருகை உனக்கில்லை யுன்சிறகி ரண்டுமெனக் கில்லை எனக்கும் உனக் கும்பேதம் ஈதே-மனைக்குள் |
45 | இதமாய் மனிதருட னேபழகு வாயன் பதனான் முறையிட் டழைப்பாய்-மதுவுண் டளிப்பிள்ளை வாய்குழறு மாம்பரத்தி லேறிக் களிப்பிள்ளைப் பூங்குயி்லும் கத்தும்-கிளிப்பிள்ளை சொன்னத்தைச் சொல்லுமென்று சொல்லப் பெயர்கொண்டாய் பின்னத்தைப் போலுமொரு பேறுண்டோ-அன்னமின்றிப் பால்குடிக்கும் பச்சைக் குழந்தைநீ யானாலும் கால்பிடிப்பார் கோடிபேர் கண்டாயே-மால்பிடித்தோர் கைச்சிலைவே ளால்வருந்துங் காமநோய் தீர்ப்பதற்கோ |