| பச்சிலை ரூபம் படைத்திருந்தாய் - அச்ச |
50 | மனப்பேதை யார்மால் வனஞ்சுடவோ வன்னி எனப்பேர் படைத்தாய் இயம்பாய்-அனத்தை நிலவோவென் பார்கள் நெடுந்துயர்வே ழத்தைக் கொலவோ வரிவடிவங்கொண்டாய் - சிலைநுதலார் கொள்ளை விரகக் கொடும்படையை வெல்லவோ கிள்ளை வடிவெடுத்தாய் கிற்பாய்நீ-உள்ளம் மிகவுடைய மாதர் விதனங் கெடவோ சுகவடிவு நீகொண்டாய் சொல்லாய்-தகவுடைய தத்தை யடைந்தவரே தத்தையடை யாரென்னும் வித்தையடைந் தாய்உனையார் மெச்சவல்லார்-முத்தமிழோர் |
55 | மாரதி பாரதியார்க் குன்னையுவ மானிப்பார் ஆரதிகம் ஆர்தாழ் வறைந்திடாய்-ஊரறிய நெய்யிற்கை இட்டாலு நீதான் பசுமையென்றே கையிட்டுச் சுத்தீ கரிக்கலாம்-மெய்யின் வடிவும் வளைந்த மணிமூக்கு மாயன் கொடியி லிருப்பவர் தங் கூறோ-நெடியமால் விண்டு தறித் தூது வேணுகா னத்தினிலே பண்டு தழைத்த பசுந்தழையோ - கொண்டசிற கல்லிலங்கு மெய்யானை அன்றழித்து வீடணன்போய்த் தொல்லிலங்கைக் கட்டுபுதுத் தோரணமோ-நல்வாய் |
60 | மழலை மொழிதான் மணிவண்ணன் செங்கைக் குழலின் இசைதானோ கூறாய் - அழகுக் கிளிப்பிள்ளாய் தெள்ளமுதக் கிள்ளாய் நலங்குக் குளிப்பிள்ளாய் இன்பரசக் குஞ்சே-வளிப்பிள்ளை தன்னைத்தாய் போலெடுத்துச் சஞ்சரிக்குஞ் சம்பத்தாய் பின்னைத்தாய் கையிலுறை பெண்டத்தாய்-பொன்னொத்தாய் முத்திநக ரேழிலொன்றே முத்தமிழ்வல் லாறிலொன்றாய் ஒத்ததனித் தவ்வரிப்பே ருற்றதொன்றே-சுத்தமுறும் |