பக்கம் எண் :

42அழகர் கிள்ளைவிடு தூது


  ஐந்துபூ தத்திலொன்றே யானபடை நான்கிலொன்றே
முந்துமுத லானபொருண் மூன்றிலொன்றே - வந்த
65 இருபயனி லொன்றே இமையே விழியே
பருவ விழியிலுறை பாவாய் - ஒருநாரில்
ஏற்றுந் திருமாலை யெய்தப்போய் ஊரெல்லாம்
தூற்றுமலர் கொண்டகதை சொல்லக்கேள் - தோற்றி
 

அழகர் மாண்பு

  அரிவடிவு மாய்ப்பின் னரன்வடிவு மாகிப்
பெரியதொரு தூணிற் பிறந்து-கரிய
வரைத்தடந் தோள் அவுணன் வன்காயங் கூட்டி
அரைத்திடுஞ் சேனை அருந்தி-உருத்திரனாய்ப்
பண்ணுந் தொழிலைப் பகைத்துநிலக் காப்புமணிந்
துண்ணும் படியெல்லாம் உண்டருளி-வெண்ணெயுடன்
70 பூதனை தந்தபால் போதாம லேபசித்து
வேதனையும் பெற்று வெளிநின்று-பாதவத்தைத்
தள்ளுநடை யிட்டுத் தவழ்ந்து விளையாடும்
பிள்ளைமை நீங்காத பெற்றியான்-ஒள்ளிழையார்
கொல்லைப்பெண் ணைக்குதிரை யாக்குந் திருப்புயத்தான்
கல்லைப்பெண் ணாக்குமலர்க் காலினான்-சொல்கவிக்குப்
பார முதுகடைந்த பாயலான் விண்ணவர்க்கா
ஆர முதுகடைந்த அங்கையான்-நாரியுடன்
வன்கா னகங்கடந்த வாட்டத்தான் வேட்டுவற்கு
மென்கா னகங்கடந்த வீட்டினான்-என்காதல்
75 வெள்ளத் தமிழ்ந்தினோன் வேலைக்கு மேன்மிதந்தோன்
உள்ளத்துள் ளானுலகுக் குப்பாலான்-தெள்ளிதின்
வெட்ட வெறுவெளியி லேநின்றுந் தோற்றாதான்
கிட்ட விருந்துங் கிடையாதான்-தட்டாதென்
எண்ணிலே மாய னெனும்பேரி னாலொளிப்போன