| கண்ண னெனும்பெயராற் காண்பி்ப்போன்-எண்ணுங்கால் எங்கு மிலாதிருந்தே எங்கு நிறைந்திருப்போன் எங்கு நிறைந்திருந்தே எங்குமிலான்-அங்கறியும் என்னை எனக்கொளித்தியானென்றுங் காணாத தன்னை யெனக்கருளுந் தம்பிரான்-முன்னைவினை |
80 | கொன்று மலமாயைக் கூட்டங் குலைத்தென்னை என்றுந் தனியே இருத்துவோன்-துன்றுபிர மாவும்நான் மன்னுயிரும் நானவ் விருவரையும் ஏவுவான் றானும்நான் என்றுணர்த்தக்-கோவலர்பால் ஆனுமாய் ஆன்கன்றும் ஆகி அவற்றைமேய்ப் பானுமாய் நின்ற பரஞ்சோதி-மாநகரப் பேரிரு ணீக்கப் பெருந்தவம்வேண் டாஉடலில் ஆருயிர் கூட்ட அயன்வேண்டா-பாருமெனச் சங்கத்தொனியுந் தடங்குழ லோசையெனும் துங்கத் தொனியுந் தொனிப்பிப்போன்-பொங்குமலை |
85 | மோதும் பரனாதி மூலம் இவனென்றே ஓதுங் கரியொன் றுடையமால்-மூதுலகைத் தந்திடுவோ னுந்துடைப்போன் றானுநா னென்றுதிரு உந்தியால் வாயா லுரைத்திடுவோன்-பைந்தமி்ழால் ஆதிமறை நான்கையுநா லாயிரத்து நற்கவியால் ஓதும் பதினொருவர் உள்ளத்தான்-பாதமெனும் செந்தா மரைமலரிற் சிந்திய தேன்போல மந்தா கினிவழியும் வண்மையான்-சந்ததமும் ஆன்ற வுலகம் அறியும் அறி யாமையுமாத் தோன்றத் துயிலாத் துயில்கொள்வோன்-ஈன்றவளைத் |
90 | தெள்ளு மணிவாயிற் காட்டிச் செகம்புறமும் உள்ளு மிருப்ப துணர்வித்தோன்-கொள்ளைக் கவற்சிதரு சென்மக் கடலிற் கலந்த அவிச்சையுவர் வாங்கமுகி லானோன்-நிவப்பா |