| மடங்கும் பரசமய வாத நதிவந் தடங்கக் கருங்கடலு மானோன்-உடம்பிற் புணர்க்க ஒருகிரணம் போலுமெனை யுங்கொண் டணைக்க மணிநிறமு மானோன்-பணைக்கும் விசைப்பூ தலவூசன் மீதிலிருப் போனும் அசைப்போனுந் தானாகும் அண்ணல்-இசைத்திசைத் |
95 | தூன்பிடிக்கும் வேடர் ஒருபார்வை யால்நூறு மான்பிடிக் கின்ற வகையென்னத்-தான்படைத்த என்பிறவி யெண்பத்து நான்குநூ றாயிரமும் தன்பிறவி பத்தாற் றணித்திடுவோன்-முன்புபுகழ்ந்து |
| பத்துறுப்பு |
| மலை |
100
| ஏத்திருவர் நீங்கா திருக்கையா லேகேச வாத்திரி யென்னு மணிபெற்றுக்-கோத்திரமாம் வெங்காத் திரஞ்சேர் விலங்குகளை மாய்த்திடலாற் சிங்காத் திரியென்னுஞ் சீர்மருவி-எங்கோமான் மேய்த்த நிரைபோல வெற்புகள்எல் லாஞ்சூழ வாய்த்த நிரையில்ஒரு மால்விடையாய் - பார்த்திடலால் இன்னியம் ஆர்க்கும் இடபகிரி யென்னும்பேர் மன்னிய சோலை மலையினான்-எந்நாளும் |
| ஆறு |
| பொற்சிலம்பி லோடுஞ்சாம் பூநதம்போன் மாணிக்க நற்சிலம்பி லோடும் நதியாகிக்-கற்சிலம்பில் இந்திரன் போலும் இடபா சலம் அவன்மேல் வந்தவிழி போலும் வளச்சுனைகள்-முந்துதிரு மாலுடைய தோளின் மணிமார்பின் முத்தாரம் போல வருநூ புரநதியான்-சீலமுறும் |