பக்கம் எண் :

அழகர் கிள்ளைவிடு தூது45


 

நாடு



105
பன்னிரு செந்தமிழ்சேர் நாடுகளும் பார்மகட்கு
முன்னிருகை காது முலை முகங்கால்-பின்னகங்கண்
காட்டும் அவற்றுட் கனகவரை மீதுபுகழ்
தீட்டும் புனனாடுந் தென்னாடும்-நாட்டமாம்
அந்நா டிரண்டில் அருள்சேர் வலக்கணெனும்
நன்னாடாந் தென்பாண்டி நாட்டினான்-பொன்னுருவச்
 

நகர்







110


 
சந்த்ரவடி வாஞ்சோமச் சந்திரவி மானத்தை
இந்திரவி மானம் இது என்றும்-மந்த்ரவிரு
துக்கொடி யேறு துசத்தம்பம் வல்லிசா
தக்கொடி யேறுகற்ப தாருஎன்றும்-மிக்கோர்க்
கொருவாழ்வா னோனை உபேந்திரனே யென்றும்
திருமாலை யாண்டானைத் தேவ-குருவென்றும்
நண்ணிய சீர்பெற்ற நம்பி முதலோரை
விண்ணவர்கோன் ஆதி விபுதரென்றும்-எண்ணுதலால்
ஆர்பதி யான அமரா பதிபோலும்
சீர்பதி யான திருப்பதியான்-மார்பிடத்தில்
 

தார்

  எண்ணுங் கலனிறத்தோ டிந்திரவிற் போற்பசந்த
வண்ணந் தருந்துளப மாலையான்-உண்ணின்று
 

கரி





115
உருக்கும் வயிணவமா மோங்குமதம் பொங்கத்
திருக்கொம்பு தான்றுதிக்கை சேர-நெருக்கிய
பாகமொத்த வைகான தம்பாஞ்ச ராத்திரமாம்
ஆகமத்தின் ஓசைமணி யார்ப்பெடுப்ப-மோகமறு
 மட்டும் பிணிக்கும் வடகலையுந் தென்கலையும்
கட்டும் புரசைக் கயிறாக-விட்டுவிடா