| ஆனந்த மான மலர்த்தாள்கண் டத்துவி தானந்த மென்றகளி யானையான்-தானந்த |
| பரி |
| வர்க்கத் துடனெழுந்து வாயி னுரைகடந்து கற்கி வடிவுநலங் காண்பித்துச்-சொர்க்கத்தில் ஏறுங் கதிகாட்டி எய்தும் அணுத்தோற்றி வீறும் பலகலையும் வென்றோடி-ஆறங்கம் சாற்றிய தன்னங்க மாய்க்கொண்டு தாரணியிற் போற்றிய வேதப் புரவியான்-பாற்கடலிற் |
| கொடி |
120 | புக்கதொரு மந்தரமும் பூமியும் பம்பரமும் சக்கரமும் போலத் தலைசுழன்று-தொக்கவிசை வற்றும் பொழுதுவிழ வாசுகியைச் சேடனைப் பற்றுங் கருடப் பதாகையான்-சுற்றியதன் |
| முரசம் |
| குன்றில் அரி யுங்கரியுங் கொண்மூவு நின்றதிர முன்றில் அதிர்மும் முரசினான்-என்றும் |
| ஆணை |
125 | அவனசை யாமல் அணுவசையா தென்னும் தவநிலை யாணை தரித்தோன்-நவநீதம் மேனியிற் சிந்தியதும் மென்கையி லேந்தியதும் வானில் உடுவும் மதியுமெனத்-தானுண்டோன் செங்கதிரும் வெண்கதிரும் என்னத் திருவிழியும் சங்கமுஞ் சக்கரமுந் தாங்கினோன்-அங்கணுல குண்டகனி வாயான் உறையுந் திருவயிற்றான் கொண்ட படியீன்ற கொப்பூழான்-மண்டி |