பக்கம் எண் :

அழகர் கிள்ளைவிடு தூது51


  விட்டுக் கறப்பதையும் விட்டீரோ-கிட்டப்போய்
மென்பால் தெறித்த வியன்முலையைப் பாற்குடமென்
றன்பால் எடுத்த தறியீரோ-மின்போல்வார்
செவ்விதழின் மேலே தெறித்தவெண்ணெ யுண்பதுபோல்
அவ்விதழை யுண்ட தயர்த்தீரோ-செவ்விதழை
குன்றன் றெடுத்தீர் குளிரும்அமு தங்கடைந்தீர்
சென் றன்று பாம்பில்நடஞ் செய்தீரே-என்றென்று
 

சோலைமலை யடைதல்

185 கொண்டபஞ் சாயுதன்மேற் கொள்கை பெறத்தேனூர்
மண்டபஞ் சார்வாய் வலங்கொண்டு-பண்டை
விரசையுடன் வைகுந்த வீடும்இது என்னப்
புரசைமலை காத்தோன் புகுந்தான்-வரிசை
உபசாரங் கொண்டருளி ஓர்சிவிகை மீது
தபசாரஞ் சீபதியைச் சார்ந்தான்-இபமுண்ட
 

தலைவி தன் நிலைமை கூறுதல்


190
வெள்ளிற் கனியானேன் வேதனை யீன்றவன்றான்
உள்ளிற் கனியானே ஊர்ந்துவரும்-பிள்ளைமதி
செவ்வை மதியோ திரைக்கடல் வாய்சிறிதோ
கொவ்வையித ழார்மொழிதான் கூற்றன்றோ-எவ்வமுறும்
காற்றேரி னானும்ஒரு காலன்அன் றோவுருக்கி
ஊற்றாத சேமணியும் ஒன்றுண்டோ-வேற்றுக்
கிளையோடு வாடிக் கிடந்தாலுஞ் சுட்டுத்
துளையாக்குழலும் உண்டோ சொல்வாய்-கிளியரசே
 

தலைவி கிளிக்கு முகமனுரை மொழிதல்

  என்கூடு பொன்கூடும் இந்த நிறத்தினால்
உன்கூடும் என்கூடும் ஒன்றுகாண்-என்கூட்டில்
மாங்கனி யுண்டு வளஞ்சேர் செழுங்கொவ்வைத்
தீங்கனி் யுண்டா சினியுண்டு-பாங்கிற்