பக்கம் எண் :

52அழகர் கிள்ளைவிடு தூது




195
குழையுமன முண்டு குழம்பிய பாலுண்
டுழையே தெளிபாலு முண்டு-விழைவறிந்
தூட்டுவேன் உன்னை யுருப்பசியா யென்னநலங்
காட்டுவேன் பட்டாடை யாற்றுடைப்பேன்-கூட்டில்
அரசா யிருத்தியா லத்தி யெடுத்துப்
புரைதீர் நறையும் புகைப்பேன்-அருகே
இளவெயிலிற் காய்வித் தெடுத்தொருகான் முத்தி
வளைபயில் கையின்மேல் வைத்துத் துளபமணி
ஈசன் றிருநாம மெல்லாம்என் போல்எனக்குப்
பாசந் தொலையப் பயிற்றுவேன்-பேசென்றே
 

வேறு பறவை தூது கூறா வென்றல்



200
ஈடுபட்ட வெள்ளை எகினத்தைத் தூதுவிட்டாற்
சூடுபட் டார்துணிந்து சொல்வாரோ-கூடுகட்டி
அன்பாய் வளர்த்ததா யார்க்குதவாக் கோகிலந்தான்
என்பா லருள்வைத் தியம்புமோ-தன்பேர்
அரியென்று சொன்னா லளியென்று சொல்லும்
வரிவண்டு பேசி வருமோ-விரகஞ்செய்
வன்கால திக்கின் மலைவா யிருக்கின்ற
தென்காலும் என்காதல் செப்புமோ-பொன்காதல்
வண்டலையுந் தாரான்முன் மாதரையெல் லாந்தூற்றும்
கொண்டலையுந் தூதுவிடக் கூடுமோ-உண்ட
படியேழுங் காக்கும் பரங்கருணை யான்முன்
கொடியோரும் போவாரோ கூறாய்-அடியார்கள்

தத்தையே ! நீதான் தகுதி என்றல்

205


அங்கிருந்தாற் கீர்த்தனஞ்செய் வாயடுத்த நாச்சியார்
பங்கிருந்தாற் கையிற் பறந்திருப்பாய்-எங்கிருந்து
வந்தாயென் றான்மா லிருஞ்சோ லையிலிருந்
தெந்தா யுனைத்தொழவந் தேனென்பாய்-அந்தச்