| சவுந்தர வல்லியெனுந் தற்சொரூ பிக்கும் உவந்தலர்சூ டிக்கொடுத்தா ளுக்கும்-சிவந்த கடுகிலே சங்கோபங் காணாம லென்மால் வடுகிலே சொல்வாய் வகையாய்-அடுகிலே சங்கெடுப்பாய் சங்கெடுக்குஞ் சச்சிதா னந்தரணி கொங்கெடுக்குந் தாமங் கொடுவருவாய்-அங்கடுக்கின் |
| இடமும் அமையமும் எடுத்துரைத்தல் |
210 215 220 | ஓருகத்தில் ஆலாகி யோருகத்தி லேஅரசாய் ஓருகத்தி லேவில் லுவமாகி-ஓருகத்திற் புத்திர தீபமுமாய்ப் புங்கவர்க்கா றாந்தருவாய்ச் சத்தி தருமோர் தருவுண்டு-மொய்த்த ஒருகோடி காவுண் டொருகோடி யாறுண் டொருகோடி பூஞ்சுனையு முண்டு-திருமால் அறங்காக்கும் யோகிகள்போல் அல்லும்பகலும் உறங்காப் புளிதானும் உண்டு-திறஞ்சேர் பிதாமக னோடுறையும் பெற்றி விளங்கப் பிதாமகன் வந்துபுகழ் பேசச்-சதாகால முந்திரமாய் வாழும் உபேந்திரனங் கில்லையென இந்திரனார் வந்தங் கினிதிறைஞ்சப்-பிந்திய தம்பியர் மூவருக்குந் தானே யரசீந்த நம்பி திருத்தாளை நம்பினோர்-வெம்பிறவித் தேகம் பவித்திரஞ்செய் சீரங்க ராசபட்டர் ஆகும்ப்ர சித்தராம் அர்ச்சகரும்-மோகமுறும் கங்குன் மலமாயை கன்மம் விளங்காமற் செங்கையி லோங்குதிரி தண்டேந்திச்-சங்கையறச் செய்யுந் திருமா லிருஞ்சோலைச் சீயரென வையம் விளங்கவரு மா தவரும்-பொய்யில்லா ஞானதீ பங்காட்டி நன்னெறிகாட் டென்றொருப மானதீ பங்காட்டி வந்துநின்று-மேனாளில் |