225 230
| முத்தமிழ்க்குப் பின்போவார் முன்போகப் பின்போன அத்தன் றிருமாலை யாண்டானும்-பத்தியினால் வையங்கார் வண்ணனையே வாழ்த்த வருந்தோழப் பையங்கா ரென்னும்ஆ சாரியரும்-மெய்யன்பாம் சிட்டர்க டேவர்க ளாகத் தினம்பரவும் பட்டர்களாம்வேத பாரகரும்-விட்டுவெனும் சோதிகரு ணைக்கடற் றோன்றிக் கரசர ணாதியுடன் வந்த அமுதாரும்-மூதுலகிற் றண்ணந் துழாயழகன் றங்குந் திருமலைபோல் நண்ணுந் திருமலை நம்பிகளும்-உண்ணின்ற மாலைமலை சோலை மலையையே நம்புதலாற் சோலைமலை நம்பியெனுந் தூயோரும்-மேலை விரிஞ்சன் முதலோர்க்கும் விட்டுப் பிரசாதம் தருஞ்சட கோபநம்பி தாமும்-பெருஞ்சீர் வரியெழுதிக் கற்றதிரு மாலிருஞ் சோலைப் பிரியரெனுஞ் சீர்கருணப் பேரும்-கிரியிலிருந் தாளுங் கடவுள் அருளே துணையாயெந் நாளுஞ்சீ காரியஞ்செய் நாயகரும்-தாள்வணங்க ஆர்த்ததிரு வோலக்க மாயிருப்பன் அப்பொழுதுன் வார்த்தை திருச்செவியில் வாயாது-சேர்த்தியிலே மெல்ல எழுந்தருளும் வேளைபார்த் தவ்வேளை சொல்ல எழுந்தொருவர் சொல்லாமுன்-வெல்லுமதன் அம்பலர் தூற்ற அடர்த்து வருமுன்னே வம்பலர் தூற்ற வருமுன்னே-கும்பமுனி வாயி னுரையடங்க வந்த கடலடங்கத் தாயின் உரையடங்கத் தத்தையே-நீயுரையாய் | | மருமாலை வாங்கி வா என்றல் | | உன்பேர் சுவாகதமென் றோதுகை யாலுனக்கும் அன்பேர் சுவாகதமுண் டாகுங்காண்-முன்பொருநாள் | |
|
|
|