கோசலை கையிற் குருசில் உனைப்புகழ்ந்து பேசின் உனைப்புகழ்ந்து பேசாரார்-நேசமுடன் எம்முடைய மாலை இருபுயத்து மாலைகேள் உம்முடைய மாலை உதவீரேல்-அம்மைதிருக் கோதையார் சூடிக் கொடுத்து வரவிட்ட தாதையார் மாலைதனைத் தம்மின்என்பாய்-நீதி அடுப்பவர் யாவர்க்கும் ஆடித் தியாகம் கொடுப்பவன் இல்லையென்று கூறான்-தடுக்கும் அருமாலை நீக்கும் அழகன் புயத்து மருமாலை நீவாங்கி வா. |