எண
எண்பொருள் நாயகன் தன்னுடனே,
ஏழுல கங்களும் ஈன்றெடுத்த
பெண்பெரு மாள்அடி பாடினவே;
பெருமாள் அரங்கரைப்
பாடினவே.
(681)
‘எண் பொருள் நாயகன்’: எண்ணத்திற்கும்,
பொருளுக்கும், அன்றி எண்ணக்கூடிய பொருளுக்கெல்லாம், தலைவன்.
அணங்கு மகிழநின் றாடினவே;
ஆர்த்தெழுந்து ஆர்த்தெழுந்து
ஆடினவே;
துணங்கை அருநடம் ஆடினவே;
சுருதிகள் பாடிநின் றாடினவே.
(682)
தோகை அசையநின் றாடினவே;
தும்பை புனைந்துநின் றாடினவே;
வாகை சூடிநின் றாடினவே;
வானவர்ப் பாடிநின் றாடினவே.
(683)
|