ப
பகையொடு பட்ட அசுரரெலாம்,
பைங்கட் சினஅரி பொங்கழல்வாய்
நகையொடு பட்டமை பாடீரே!
நம்பசி கெட்டமை
பாடீரே!
(673)
பள்ளியில் வைத்ததைப்
பாடீரே!
பாலன்அன் பானதைப்
பாடீரே!
தெள்ளிய சிந்தையைப்
பாடீரே!
செப்பின நாமமும்
பாடீரே!
(674)
‘தெள்ளியசிந்தை’: பிரகலாதனுடையது.
சீறிய தந்தையைப் பாடீரே!
செய்த கொடுமையைப்
பாடீரே!
ஆறி இருந்தமை பாடீரே!
அஞ்சாத நெஞ்சனைப்
பாடீரே!
(675)
‘அஞ்சாத நெஞ்சன்’: பிரகலாதன்
“காண்!”என்று நின்றமை பாடீரே!
“காட்டு”என்று வந்தமை
பாடீரே!
தூண்நின்ற சோதியைப்
பாடீரே!
தோற்றிய சீற்றமும்
பாடீரே!
(676)
இடந்த திருஉகிர் பாடீரே!
எடுத்தகை ஒன்றென்று
பாடீரே!
கிடந்த திருமடி பாடீரே!
கேட்டார் திருவடி
பாடீரே!
(677)
‘கிடந்த திருமடி’: இரணியன் கிடந்த திருமடி
என்றென்று நின்றுஇசை பாடினவே;
இரணியன் தோற்றமை பாடினவே;
வென்ற செருக்களம் பாடினவே;
வீரத் திருப்புயம் பாடினவே.
(678)
அந்தணர் தங்கள் மனத்தவத்தால்
அவ்உலகத்திருந்து, இவ்உலகம்
வந்த திருவடி பாடினவே;
வடதிருக்கோபுரம் பாடினவே.
(679)
சோலை அரங்கரைப் பாடினவே;
துய்ய முறுவலைப் பாடினவே;
சீலம் மகிழ்ந்துஇசை பாடினவே;
திருவின் உருவையும்
பாடினவே.
(680)
|