பக்கம் எண் :

காளிக்குக்கூளி கூறியது135


     (வி-ம்.) மணி - இரத்தினம். இனைய - இத்தன்மையனவாகிய. கனகம்-
பொன். மகரக்குழை - சுறாமீன்  வடிவான  காதணி.  நீலமணியும் வைரமும் பதித்தமையின் இருளும் வெயிலும் எறித்தன வென்க. பிடி - பெண்  யானை. 
பகடு -ஆண் யானை.  மனங்  கவரும்  இயல்பு  வாய்ந்தமை குறிக்க  உள்
பகடு என்றார்.அரிவையர்-பெண்கள். பட்டம், நெற்றிப்பட்டம்.       (24)

இதுவும் அது

336.ஏறி யருள வடுக்குமிந் நூறு களிறு மிவற்றெதிர்
      ஏனை யரச ரொருத்தரோ ரானை யிடுவ ரெனிற்புவ
மாறி அருள அவர்க்கிடை யாமும் இசைவம் எனப்பல
     மான அரசர் தனித்தனி வாழ்வு கருதி உரைப்பரே.

     (பொ-நி.) நூறு  களிறும்  ஏறி  அருள அடுக்கும். இவற்று எதிர் ஓர்
ஆனை இடுவர் எனில் அவர்க்கு இடை இசைவம் என உரைப்பார்; (எ-று.)

     (வி-ம்.) அடுக்கும் -தகுதியாகும்.  எதிர்-எதிராக(ஒப்பாக). மாறி-விற்று.
அருள் (யானை) கொடுத்த. அவ்வவர்க்கு எனற்பாலது அவர்க்கு என நின்றது.
இடை  -  சமமாக.   இசைவம்  -  கொடுக்க   இயைவோம்.   மானம் -பெருமையினையுடைய. வாழ்வு-தங்கள் நல்வாழ்வு.                 (25)

திறைபெற்ற குலோத்துங்கன் வினாயது

337.அரசர் அஞ்சலென அடியி ரண்டுமவர்
      முடியின் வைத்தருளி அரசர்மற்
றுரைசெ யுந்திறைகள் ஒழிய நின்றவரும்
     உளர்கொ லென்றருளு பொழுதிலே.

     (பொ-நி.) 'அஞ்சல்' என, அடிமுடியின் வைத்தருளி "அரசர் திறைகள்
ஒழிய நின்றவரும் உளர்கொல்" என்று அருளு பொழுதினில்; (எ-று.)

     (வி-ம்.)   அரசர்  அஞ்சல் - அரசர்களே   அஞ்சாதீர்    அல்-
எதிர்மறை   வியங்கோள்.  அவர்முடி - அவ்வரசர்கள்  தலையின்  மேல்.
உரைசெயும்  -   சொல்லப்படுகின்ற.    திறைகள்   ஒழிய   நின்றவர் -
திறைசெலுத்தாதவர். அருளுதல் - கேட்டருளுதல்.                  (26)