பக்கம் எண் :

136கலிங்கத்துப்பரணி

வினாயதற்கு மறுமொழி

338.கடவ தந்திறைகொ டடைய வந்தரசர்
      கழல்வ ணங்கினர்கள் இவருடன்
வடக லிங்கர்பதி யவனி ரண்டுவிசை
     வருகி லன்திறைகொ டெனலுமே.

     (பொ-நி.)  அரசர்   திறைகொடுவந்து  வணங்கினர்,  கலிங்கர்  பதி
வருகிலன் எனலும்; (எ-று.)

     (வி-ம்.) கடவ-செலுத்தக் கடவதான. அமைந்து ஒரு சேர. வட கலிங்கர்
பதி-வடக்கிலுள்ள கலிங்க நாட்டு வேந்தன். இரண்டு விசை-இருமுறை.

அதுகேட்ட குலோத்துங்கன் நிலை

339.உறுவ தென்கொலென நிலைகு லைந்தரசர்
      உயிர்ந டுங்கஒளிர் பவளவாய்
முறுவல் கொண்டபொருள் அறிகி லம்சிறிதும்
     முனிவு கொண்டதிலை வதனமே.

     (பொ-நி.) அரசர் "என்கொல்"  எனக்  குலைந்து  நடுங்க  பவளவாய்
முறுவல் கொண்டபொருள் அறிகிலம்; வதனம் முனிவு கொண்டதிலை; (எ-று.)

     (வி-ம்.) உறுவது - நேரப்போவது. முறுவல் -புன்னகை,  எள்ளியதால்
எழுந்தது. முனிவு-சினம். வதனம்-முகம்.                         (28)

குலோத்துங்கன் இட்ட கட்டளை

340.எளியன் என்றிடினும் குன்றரணம்
      இடிய நம்படைஞர் கடிதுசென்
றனிய லம்புமத மலைகள் கொண்டணைமின்
     அவனை யுங்கொணர்மின் எனலுமே.

     (பொ-நி.)   "எளியன்  என்றிடினும்,  குன்றரணம்  வலிய;்  படைஞர்
சென்று மதமலைகள்  கொண்டு  அணைமின்;  அவனையும்  கொணர்மின்
எனலும்; (எ-று.)