பக்கம் எண் :

14கலிங்கத்துப்பரணி

     அடர்த்து எறிதல் - நெருங்கிமோதுதல்;  நெருங்கி அழித்தல். வஞ்சி மானதன்-வஞ்சி சூடிய குலோத்துங்கன். படை - வேற்படை. கண் மடநலீர்:
இரண்டன்   உருபும்   பயனும்  தொக்க  தொகை,  கண்ணின்  பிறழ்ச்சி
கூறப்பட்டது.  மகளிர்  கண்ணிற்கும் குலோத்துங்கன் படைக்கும் சிலேடை
வகையால் ஒப்புமை கூறியதாம்.                                (12)

புணர்ச்சி நிலை கூறி விளித்தது

33.அவசமுற் றுளம்நெகத்  துயில்நெகப் பவளவாய்
     அணிசிவப்  பறவிழிக் கடைசிவப் புறநிறைக்
கவசமற்று இளநகைக் களிவரக் களிவரும்
   கணவரைப் புணருவீர் கடைதிறந் திடுமினோ.

    (பொ-நி) உளம்நெக, துயில்நெக, வாய்சிவப்புற, விழிக்கடை சிவப்புற,
களிநகை வர புணருவீர் திறந்திடுமின்; (எ-று.)

    (வி-ம்.) அவசம் - பரவசம். நெக - இளக. துயில் - தூக்கம்.  நெக-
தொலைய.  அற-நீங்க.  சிவப்புற-செம்மை  நிறம் கொள்ள. நிறைக்கவசம்-
நிறையாகிய   மனக்கட்டு.   அற்று-அழிந்து.  களி-களிப்பால்.  இளநகை-
புன்முறுவல். களிவரும் - களிப்படையும்.  புணர்ச்சியில்  ஊடல் வேறுபாடு
கூறியவாறு.  காமவேட்கை  கொண்ட  மகளிர்  அச்சம்  நாணம் முதலிய
மகடூஉக் குணங்களை யிழத்த லியல்பாதலால்  'நிறைக் கவசமற்று' என்றார்.
                                                         (13)

கலவி மயக்க நிலை கூறி விளித்த

34.கலவிக்களியின் மயக்கத்தாற்
    கலைபோய் அகலக் கலைமதியின்
நிலவைத் துகிலென் றெடுத்துடுப்பீர்
   நீள்பொற் கபாடந் திறமினோ.

   (பொ-நி) களியின்  மயக்கத்தால்,  கலை  அகல,  நிலவை  எடுத்து
உடுப்பீர் திறமின்; (எ-று.)

   
(வி-ம்) கலவி - புணர்ச்சி.  களி-கள்ளுண்டு  களித்தது போன்ற மிகு
மகிழ்ச்சி. கலை - ஆடை. அகல - உலைந்துபோக; மதி-நிலா. நிலவு-நிலா
வொளி. துகில்-ஆடை.  உடுப்பீர் - அணிவீர். நிலவொளியைத் துகிலாகக்
கருதினர் என்க.                                            (14)