பக்கம் எண் :

கடை திறப்பு15


காமமயக்கநிலை கூறி விளித்தது

35. நனவினிற் சயதரன் புணரவே பெறினுநீர்
     நனவெனக் தெளிவுறாது அதனையும் பழையஅக்
கனவெனக் கூறுவீர் தோழி மார் நகைமுகங்
   கண்டபின் தேறுவீர் கடைதிறந் திடுமினோ.

    (பொ-நி.)புணரவே  பெறினும், நனவெனத் தெளிவுறாது, கனவெனக்
கூறுவீர்; நகைமுகம் கண்டபின் தேறுவீர் திறந்திடுமின், (எ-று.)

    (வி-ம்.)நனவு - விழித்திருக்கும்  நேரம்.  சயதரன்-குலோத்துங்கன்.
தெளிவுறாது - தெளியாமல். அது - புணர்ச்சி. நகை -நனவைக் கனவெனக்
கூறியதைக்கேட்டு எள்ளி ஆடிய நகை. தேறுவீர்- தெளிவீர்.  நனவையும்
கனவென   மயங்கினர்.   இவ்வாறு  மயங்கக்காரணம்  பழைய  கனவை
இடைவிடாது   எண்ணியிருந்தமையே   என்க.                   (15)

ஊடலும் கூடலும் விழைந்த இயல்புகூறி விளித்தது

36.மெய்யே கொழுநர் பிழைநலிய
    வேட்கை நலிய விடியளவும்
பொய்யே உறங்கும் மடநல்லீர்
   புனைபொற் கபாடம் திறமினோ.

    (பொ-நி.) பிழை  நலிய,  வேட்கை  நலிய,  பொய்யே  உறங்கும்
மடநல்லீர் திறமின்; (எ-று.)

    (வி-ம்.) கொழுநர் - கணவர். நலிய - மனத்தை வாட்ட. வேட்கை-
கலவி  வேட்கை.  உறங்கல் -  தூங்கல்.   ஊடினாராயினும்    புணர்ச்சி
வேட்கையால் உறங்காராயினர். பொய்யாகவுறங்குதலாவது கண் மூடியவாறு கிடத்தல்.                                                  (16)

கலவி மயக்கநிலை கூறி விளித்தது

37.போக அமளிக் களிமயக்கில்
     புலர்ந்த தறியா தேகொழுநர்
ஆக அமளி மிசைத்துயில்வீர்
   அம்பொற் கபாடம் திறமினோ.
   
    (பொ-நி.) களி மயக்கில், புலர்ந்த தறியாதே, ஆகஅமளி மிசைத் துயில்வீர் திறமின்; (எ-று.)