| (வி-ம்.) போகமயக்கு என இயைக்க. போகம் -கலவி இன்பம். அமளி - படுக்கை. களிமயக்கு -கள்ளுண்டது போன்ற மயக்கு. புலர்தல் -விடிதல். கொழுநர் - கணவர். ஆகம்-மார்பு. துயில் - தூக்கம். விடிந்தது தெரியாமல் கணவர் மார்பிடத்தே தூங்கினர் என்க. (17) கணவர் வரவு பார்க்கும் நிலை கூறி விளித்தது | 38. | ஆளுங் கொழுநர் வரவுபார்த்து | | | அவர்தம் வரவு காணாமல் தாளும் மனமும் புறம்பாகச் சாத்தும் கபாடம் திறமினோ. | (பொ-நி) கொழுநர் வரவு பார்த்து, வரவு காணாமல் தாளும் மனமும் புறம்பாக, சாத்தும் கபாடம் திறமின்; (எ-று.) (வி-ம்.) ஆளும்-தம்மை ஆட்கொண்ட; தாம் ஆளும். கொழுநர்- கணவர். தாள்-பாதம். புறம்பு-வாயிற்படிக்கு வெளியே, பாதமும் மனமும் வாயிலுக்கு வெளியே சென்று சென்று பார்க்க விழைந்தனவாம் என்க. (18) கொங்கையின் அழகு கூறி விளித்தது | 39. | உந்திச் சுழியின் முளைத்தெழுந்த | | | உரோமப் பசுந்தாள் ஒன்றில் இரண்டு அந்திக் கமலங் கொடுவருவீர் அம்பொற் கபாடம் திறமினோ. | (பொ-நி) உந்திச் சுழியின் எழுந்த பசுந்தாள் ஒன்றில் இரண்டு அந்திக் கமலம் கொடு வருவீர் திறமின்; (எ-று.) (வி-ம்.) உந்திச்சுழி-கொப்பூழ். உரோமம்-மயிரொழுங்கு. தாள்-தண்டு. அந்திக்கமலம்-மாலையில் காணப்படும் தாமரைமொட்டுப் போன்ற கொங்கைகள். கொடு (இடைக்குறை)-கொண்டு. ஒரு தண்டில் இரண்டு கமலம் போன்றன கொங்கைகள். (19) |