| பெண்கள் வேளம் புகுந்த தன்மை கூறி விளித்தது | 40. | மீனம்புகு கொடிமீனவர் விழியம்புக ஓடிக் | | | கானம்புக வேளம்புகு மடவீர் கடை திறமின். | (பொ-நி.) மீனவர் ஓடிக்கானம்புக, வேளம்புகு மடவீர் திறமின்; (எ-று)
(வி-ம்.) மீனம்புகு கொடி - மீன் வடிவெழுதிய கொடி. மீனவர்- பாண்டியர். விழி-கண். அம்பு-நீர். கானம்- காடு. வேளம் - சிறைப்பட்ட மகளிர் வாழும் அரண்மனை. மடவார்- பெண்கள். பாண்டியர் தோற்றோட அவர் நாட்டுப் பெண்கள் வேளம் புகுந்தனர். தோற்ற அரசரின் மகளிரைச் சிறை பிடித்துத் தனியிடத்தில் அடைப்பது பண்டைக்கால மன்னரின் வழக்கு. (20) பெண்களைத் திறையாகப் பெற்றமை கூறி விளித்தது | 41. | அலைநாடிய புனல்நாடுடை அபயற்கிடு திறையா | | | மலைநாடியர் துளுநாடியர் மனையிற்கடை திறமின். |
(பொ-நி) அபயற்கு இடு திறையாம் மலைநாடியர், துளுநாடியர், திறமின்; (எ-று.)
(வி-ம்.) அலைநாடிய புனல்-அலைவீசும் புனல்; காவிரி. அபயன்- குலோத்துங்கன். திறையா-திறைப் பொருளாகக் கொடுக்கப் பெற்ற. மலை நாடு-சேர நாடு. துளுநாடு-துளுவ நாடு. பெண்கள் திறைப் பொருளானமை கூறப்பட்டது. அழகு மிக்க பெண்களும் முன்னாளில் திறைப்பொருளாகச் செலுத்தப்பட்டனர். (21) கணவரோ டுடனுறையுநிலை கூறி விளித்தது | 42. | விலையி லாதவடம் முலையி லாடவிழி | | | குழையி லாடவிழை கணவர்தோள் மலையி லாடிவரு மயில்கள் போலவரு மடந லீர்கடைகள் திறமினோ. | (பொ-நி) வடம் முலையில் ஆட, விழி குழையில் ஆட, கணவர் தோள் மலையில் ஆடிவரும் மயில்கள் போல வரும் நலீர் திறமின்; (எ-று.)
(வி-ம்.) வடம் - முத்துமாலை. விழி - கண். குழை - காதணி. விழி குழைவரை ஓடிய வென்க. விழை - விரும்பும். தோள்மலை-தோளாகிய மலைமீது; பண்புத்தொகை. நலீர்-நல்லீர்; |