பெண்களே. கணவர் தோள்மலையில் மயில் போன்றனர் பெண்கள். மயில்கள் மலைமீது ஆடுதல் இயல்பாகலின் இவ்வாறு கூறினார். (22) கன்னட நாட்டினரான பெண்களை விளித்தது | 43. | மழலைத்திரு மொழியிற்சில வடுகும் சில தமிழும் | | | குழறித்தரு கருநாடியர் கறுகிக்கடை திறமின். | (பொ-நி) மொழியில், வடுகும் தமிழும் கு ழறித்தரு கருநாடியர் திறமின்; (எ-று) (வி-ம்.) மொழி - சொல், வடுகு - தெலுங்கு. தரு - கொடுக்கின்ற. கருநாடியர் - கருநாடகம் என்ற நாட்டில் வாழ்ந்திருந்தவர். கருநடப் பெண்கள் தெலுங்கும் தமிழும் கலந்து பேசினர் என்க. குறுகி-வந்து. (23)ஊடலும் கூடலும் விழைந்த இயல்பு கூறி விளித்தது | 44. | தழுவுங் கொழுநர் பிழைநலியத் | | | தழுவேல் என்னத் தழுவியகை வழுவ உடனே மயங்கிடுவீர் மணிப்பொற் கபாடம் திறமினோ. | (பொ-நி.) கொழுநர் பிழை நலிய, தழுவேல் என்ன! தழுவியகை வழுவ, மயங்கிடுவீர் திறமின்; (எ-று.) (வி-ம்.) கொழுநர் - கணவர். நலிய-வருத்த. என்ன-என்ன; என்று கணவரை நோக்கிக்கூற. கை-கணவர் கை. வழுவ -நழுவ. மயங்கிடுவீர் -(புணர்ச்சி விருப்பால்). மயங்குவீர் மணிப்பொன்-அழகிய பொன்னாலான. ஊடலால் தழுவேல் எனவும் கணவர் தழுவுதல் ஒழியப், புணர்ச்சி விருப்பால் மனம் வருந்தினர் என்க. (24)நகையின் சிறப்புக் கூறி விளித்தது | 45. | வேகம் விளைய வருங்கொழுநர் | | | மேனி சிவந்த படிநோக்கிப் போகம் விளைய நகைசெய்வீர் புனைபொற் கபாடம் திறமினோ. | (பொ-நி.) கொழுநர், சிவந்தபடி நோக்கி, போகம் விளைய, நகை செய்வீர் ,திறமின்; (எ-று.) |