பக்கம் எண் :

காளிக்குக்கூளி கூறியது151


     (பொ-நி.) அத்  தண்டு.  கலிங்கர்  பூமி,  அரணம்  உடைத்தென்று
கருதாது வருவது போலும்; (எ-று.)

     (வி-ம்.) கான்-காடு;  அரண் - பாதுகாப்பு. தண்டு-சேனை.     (66)

அமைச்சன் மொழிந்தது

378.என்று கூறலும் எங்க ராயனான்
 ஒன்று கூறுவன் கேளென் றுணர்த்துவான்.

     (பொ-நி.) கூறலும்,   "எங்கராயன்    கூறுவன்,   கேள்"   என்று
உணர்த்துவான்; (எ-று.)

     (வி-ம்.) எங்கராயன்: அமைச்சனும் படைத்தலைவனுமானவன்.
                                                       (67)

இதுவும் அது

379.அரசர் சீறுவ ரேனும்அடியவர்
 உரைசெ யாதொழி யார்க ளுறுதியே.

     (பொ-நி.)  அரசர்  சீறுவரேனும்,  அடியவர்  உறுதி  உரை  செயாது
ஒழியார்கள்; (எ-று.)

     (வி-ம்.)  சீறுதல்-சினங்கொள்ளுதல். அடியவர்: அமைச்சர் முதலியோர்.
உறுதி-நன்மை பயப்பன.                                    (68)166

இதுவும் அது

380.ஏனை வேந்தை யெறியச் சயதரன்
 தானை அல்லது தான்வர வேண்டுமோ.

     (பொ-நி.)   எறிய,   சயதரன்    தானையல்லது   தான்   (அவன்) வரவேண்டுமோ?  (எ-று.)

     (வி-ம்.) ஏனை  வேந்து - மற்ற  அரசர். எறிய - அழிக்க. சயதரன் -
வெற்றியையுடையவன்; ஈண்டு முதற் குலோத்துங்கன்.             (69)

இதுவும் அது

381.விட்ட தண்டினின் மீனவர் ஐவரும்
 கெட்ட கேட்டினைக் கேட்டிலை போலுநீ.