(பொ-நி.) குழறியும், பதறியும், முறையிட்டு, துகில்விழ, சனபதி அடியில் புக விழு பொழுதத்து; (எ-று.) (வி-ம்.) குழறி-சொற்கள் தடுமாறி. பதறி-கடுக்கங் கொண்டு. துகில்-ஆடை. அடைய-எல்லாம். சனபதி-அரசன். அடி-பாதம். (63)கேட்ட கலிங்க வேந்தன் செயல் | 375. | அந்தரமொன் றறியாத வடகலிங்கர் | | | குலவேந்தன் அனந்த பன்மன் வெந்தறுகண் வெகுளியினால் வெய்துயிர்த்துக் கைபுடைத்து வியர்த்து நோக்கி. |
(பொ-நி.) அறியாத வேந்தன் அனந்த பன்மன் வெய்துயிர்த்து, கைபுடைத்து வியர்த்து நோக்கி; (எ-று) (வி-ம்.) அந்தரம்-முடிவு. தறுகண்-கொடுமை மிக்க. வெகுளி-சின்னம். வெய்து உயிர்த்து-பெருமூச்சுவிட்டு. கைபுடைத்து-கைகொட்டி. (64) கலிங்க வேந்தன் மொழிந்தது | 376. | வண்டினுக்கும் திசையானை மதங்கொடுக்கும் | | | மலர்க்கவிகை அபயற் கன்றித் தண்டினுக்கும் எளியனோ எனவெகுண்டு தடம்புயங்கள் குலுங்க நக்கே. |
(பொ-நி.) கொடுக்கும் அபயற்கன்றி, தண்டினுக்கும் எளியனோ என வெகுண்டு நக்கு, (எ-று.) (வி-ம்.) யானை மதம்: ஆறன் தொகை. மலர் கவிகை - பரந்த வெண்கொற்றக்குடை. கொடுக்கும் அபயன் என்க. இதனால் அவன் அரசாட்சியின் பரப்புக் கூறியவாறாம். தண்டு -(அவனது) சேனை. தடம்புயம்- பெருத்த தோள்கள். (65) இதுவும் அது | 377. | கானரணும் மலையரணும் கடலரணும் | | | சூழ்கிடந்த கலிங்கர் பூமி தானரண முடைத்தென்று கருதாது வருவதுமத் தண்டு போலும். |
|