(வி-ம்.) கடல்போல் வந்தபடையாதலின், அதன் பெருக்கத்தால், அது வடக்கின்கண் கங்கையும் அணித்தாம்படி பரவி நின்றதுபோல் காணப்பட்டதென்க. புகல்இடம் - செல்லுதற்கேற்ற இடம். அரண்-பாதுகாவல். அதிபதி-அரசன். (60) இதுவும் அது | 372. | இடிகின் றனமதில் எரிகின் றனபதி | | | எழுகின் றனபுகை பொழிலெல்லாம் மடிகின் றனகுடி கெடுகின் றனமினி வளைகின் றனபடை பகையென்றே |
(பொ-நி.) இடிகின்றன, எரிகின்றன, எழுகின்றன, மடிகின்றன, கெடுகின்றனம் வளைகின்றன என்றே; (எ-று.) (வி-ம்.) பதி-ஊர். பொழில்-சோலை. மடிகின்றன-அழிக்கப்படுகின்றன. வளைகின்றன - சுற்றிக்கொள்கின்றன. கெடுகின்றனம்: தன்மைவினை; பகை படை எனஇயைக்க. (61) கலிங்கர் அரசனிடம் முறையிட்டது | 373. | உலகுக் கொருமுதல் அபயற் கிடுதிறை | | | உரைதப் பியதெம தரசேயெம் பலகற் பனைகளை நினைவுற் றிலைவரு படைமற் றவன்விடு படையென்றே. |
(பொ-நி.) அரசே, இடுதிறை உரைதப்பியது; எம் கற்பனைகளை நினைவுற்றிலை; வருபடை அவன் விடுபடை என்று; (எ-று.) (வி-ம்.) உலகுக்கு ஒரு முதல் - உலகத்துக்கு ஒப்பற்ற தலைவன். அபயன் - (குலோத்துங்க) சோழன், பயமில்லாதவன் என்று பொருள்; சோழமன்னன் யார்க்கும் அஞ்சாதவனாகலான், இப்பெயரால் அழைக்கப்பெற்றான். உரை தப்பியது -சொல்தப்பியது. கற்பனை முன்னறிந்து சொல்லிய சொல். அவன்: குலோத்துங்கன். (62) இதுவும் அது | 374. | உரையிற் குழறியும் உடலிற் பதறியும் | | | ஒருவர்க் கொருவர்முன் முறையிட்டே அரையிற் றுகில்விழ அடையச் சனபதி அடியிற் புகவிழு பொழுதத்தே. |
|