பொருந்திய. கருவிளம் - கருவிள மலர் போன்ற கண்கள். நீர்பட - கண்ணீரைப் பொருந்த. ஊடுவீர் - கணவரொடு புலப்பீர். முலை நீர்மை கெடவும், கண்நீர் படவும் ஊடினர் என்க. செருவிளநீர் படுதல் - பசலை கொண்டு நிறவேற்றுமையைப் பெறுதல். (32) கலவி நிலைகூறி விளித்தது | 53. | அளக பாரமிசை அசைய மேகலைகள் | | | அவிழ ஆபரண மிவையெலாம் இளக மாமுலைகள் இணைய றாமல்வரும் இயன லீர்கடைகள் திறமினோ. | (பொ-நி.) அளகபாரம் அசைய, மேகலைகள் அவிழ, ஆபரண மிவையெலாம் இளக, முலைகள் வரும் இயல் நலீர் திறமின்; (எ-று.)
(வி-ம்.)அளகம் - கூந்தல். பாரம் - சுமை; மிகுதி. மிசை-மேலே. மேகலை - இடை அணி. இளக - நெகிழ. மா-பெரிய. இணை அறாமல்- ஒன்றோடொன்று உயர்வு தாழ்வின்றி. வரும் - வளரும். இயல்- இயல்பினையுடைய. நலீர் - நல்லீர்; பெண்களே. கலவிக்கால இயல்பு கூறப்பட்டது. (33) இதுவும் அது | 54. | மதுர மானமொழி பதற வான்விழிசி | | | வப்ப வாயிதழ்வெ ளுப்பவே அதர பானமது பான மாகஅறி வழியு மாதர்கடை திறமினோ. | (பொ-நி.)மொழி பதற, விழி சிவப்ப, இதழ் வெளுப்ப, அதரபானம் மதுபானமாக அறிவழியும் மாதர் திறமின்; (எ-று.) (வி-ம்.) மதுரம் - இனிமை. மொழி - சொல்.பதற-தடுமாற. வாள்- ஒளிபொருந்திய. இதழ் - உதடு. அதரம் - உதடு. பானம் - பருகுவது. மதுபானம் -கள். இதுவும் கலவி இயல்பு கூறியது.கள்ளுண்டார்க்கும் கலவியில் திளைத்தாகக்கும் சொல் தடுமாறுதலும், கண்கள் சிவத்தலும், வாயிதழ்கள் வெளுத்தலும் இயல்பு. ஆகலான் இரண்டு நிலையும் ஒன்றார் இணைத்துக் கூறினார். (34) |