1. சுயம்வர காண்டம்
நூல்
தோற்றுவாய்
தருமராசன் வனத்தில் வாழ்தல்
8. பாண்டவரின் முன்தோன்றல்
பார்முழுதும் தோற்றொருநாள்
ஆண்டகையே தூதுவனாய்ச் சென்றவனி - வேண்ட
மறுத்தான் இருந்தானை மண்ணொடும்போய் மாளப்
பொறுத்தான் இருந்தான் புலர்ந்து.
(இ - ள்.) பாண்டவரின்
முன்தோன்றல்-பாண்டு மன்னன் மக்கள் ஐவரில்
மூத்தவனான தருமன், பார்முழுதும் தோற்று - (சூதாடித்
துரியோதனனுக்கு) தன் நாடு யாவற்றையும்
இழந்ததனால், ஆண்தகையே தூதுவனாய் சென்று அவனி
வேண்ட - ஆண்களிற் சிறந்தவனாகிய (கண்ணபிரானே)
தூதனாகத் (துரியோதனன் முன்னிலையில்) போய்
நாட்டைத் தருமாறு அவனைக் கேட்க, மறுத்தான் இரும்
தானையொடும் மண்ணொடும் போய் மாள - அதனைக்
கொடுக்க மறுத்தவனான துரியோதனன் மிக்க
படைவீரர்களோடும் நாட்டினோடும் தன் உரிமையற்று
மாண்டொழியும்படி, பொறுத்தான் ஒருநாள் புலர்ந்து
இருந்தான் - பொறமையுடன் இருந்தவனான தருமன், ஒரு
நாள் வனத்தில் துன்பத்தால் வாடி இருந்து வந்தான்.
(க - து.) தருமராசன் வருத்தத்துடன்
வனத்தில் வாழ்ந்து வருவானானான்.
(வி - ரை.) பாண்டவர் - பாண்டுவின்
மக்கள். முன்தோன்றல் - முன்னே பிறந்தவன்;
தமையன். மறுத்தான், பொறுத்தான் என்பன,
இறந்தகால வினையாலணையும் பெயர்கள். மாள - இறக்க.
காரணப் பொருட்டாய் வந்த எதிர்காலச்
செயவெனெச்சம். (1)
மன்னர் பலர் வனத்தில் தருமனைக்
காணல்
9. நாட்டின்கண் வாழ்வைத் துறந்துபோய்
நான்மறையோர்
ஈட்டங்கள் சூழ இருந்தானைக் - காட்டில்
பெருந்தகையைக் கண்டார்கள்
பேரெழில்தோள் வேந்தர்
வருந்தகையர் எல்லாரும் வந்து.
|