டிருந்ததனால் ‘மாறன்’ எனப்பட்டார்.
இவர் பராங்குசன், நாவீறுடையபிரான்,
வகுளப்பிரான், குருகைப்பிரான், சடகோபர் என்னும்
வேறு பெயர்களாலும் அழைக்கப்பெறுவர்.
முதற்பாட்டில் ‘நேசரிதம்’ என்று தொடங்கும்
முன் அடிகள் இரண்டுக்கும் பொருள் விரித்திருத்தலால்,
ஈண்டு அவ்வடிகட்கு உரை வரையப்பெறவில்லை.
தாள் மலர் - தாளாகிய மலர்: இருபெயரொட்டு.
மலர், தாமரைப்பூவைக் குறிக்கும் 1‘புவெனப்படுவது
பொறிவாழ் பூவே’ என்பது பெரியார் திருமொழியாகலான்.
(2)
திருமால்
3. ஆதித் தனிக்கோலம் ஆனான் அடியவற்காச்
சோதித் திருத்தூணில் தோன்றினான் - வேதத்தின்
முன்நிற்னான் வேழம் முதலே எனஅழைப்ப
என்என்றான் எங்கட் கிறை.
(இ - ள்.) ஆதி தனி கோலம் ஆனான் -
முன்காலத்தில் தன் ஒப்பில்லாத வராகஅவதாரம்
எடுத்தவனும், அடியவன்கு ஆ - தன் அடியவனான பிரகலாதனுக்காக,
சோதி திருத்தூணில் தோன்றினான் - ஒளி பொருந்திய
அழகிய தூணிடத்து நரசிம்ம மூர்த்தியாக வௌப்பட்டவனும்,
வேதத்தின் முன் நின்றான் - வேதத்தில் முதன்மையான
பிரணவப்பொருளாக நிலைபெற்றிருந்தோனும், வேழம்
முதலே என அழைப்ப - கசேந்திரன் என்னும் யானை முதன்மையானவனே
என்று ஓலமிட்டழைக்க, என் என்றான் - என்னவென்று
அதன்முன் தோன்றிவந்து துயர் தீர்த்தவனுமாகிய திருமால்,
எங்கட்கு இறை - எமக்கு இறைவன் ஆவான். (அவனை வாழ்த்துவோம்
; வணங்குவோம்.)
(க - து.) திருமால் எம்மைக்
காக்கும் கடவுளாவார் ; அவரை வணங்குவோம்.
(வி - ரை.) கோலம் - வராகம்: வடசொல்.
தமிழில் பன்றியென்பது பொருள். ஆதித் தனிக்கோலம்
என்றதனால் ஆதிவராக உருவெடுத்த திருமால் அவதாரத்தைக்
குறித்தது. ஊழிக் காலத்தில் இவ்வுலகம் அழியாவண்ணம்
வராக (பன்றி உரு) அவதாரமெடுத்துத் தன்
கொம்பினால் பூமியைத் தாங்கினாரென்பது புராணக்
கதை. அடியவன் - பிரகலாதன். அவனுக்காகத் திரு
-------------------------------
1. நால்வர் நான்மணிமாலை : 40.
|