சந்தவிருத்தம் 185. | மட்டறுக டற்புவிய னைத்துமொரி மைப்பினின்ம | | றைத்துடன்வி டுத்தி டுவனேற் | | றெட்டுவரை யைக்கடலை முட்டியுள டக்கிடுவன் | | இத்தனையும் வித்தை யலவாற் | | றுட்டமத னைப்பொடிப டுத்திமது ரைக்குளுறை | | சொக்கர்குண மெட்டி னொடுமா | | சிட்டர்கடு தித்திடும கத்துவம னைத்துமொரு | | |
185.(சந்தக் குழிப்பு.) தத்தனன தத்தனன தத்தனன தத்தனன தத்தனன தத்த தனனா.
சம்பிரதம் - இந்திரசால வித்தையில் வல்லவன் தன் சிறப்பைத் தானே கூறுதல். செய்தற்கெளிய செயல்களையே செய்தற்கரிய செயல்களெனப் பொருள் படுவதற்கேற்ற சொல்லமைதியால் இதனைக் கூறுவர் ஆசிரியர்.
மட்டு - எல்லை. ஓர் இமைப்பினின் மறைத்து உடன் விடுத்திடுவன் - ஒரு கணத்துள் மறைத்து உடனே வெளிப்படுத்துவேனென்பது வேறு பொருள்; ஒரு முறை இமைத்தலினால் மறையச் செய்து உடனே இமைத்தலை விடுப்பேனென்பது செம்பொருள்; கண்ணை இமைக்கும்போடு இமைப்பவனுக்கு அக்கணத்தில் உலகம் மறைதல் இயல்பே. ஏற்று எட்டுவரையைக் கடலை முட்டியுள் அடக்கிடுவன் - தாங்கி எட்டுமலைகளையும் சமுத்திரத்தையும் மூடிய கைக்குள் அடக்கிவிடுவேனென்பது வேறு பொருள்; வாங்கிக் கொண்டு எள் துவரை கடலையென்னும் தானியங்களை முஷ்டிக்குள் அடக்கிவிடுவேனென்பது செம்பொருள். (பி-ம்.) ‘மற்றெட்டுவரை’. இத்தனையும் வித்தையலவென்றது என் பெருவன்மையாற் செய்வனவென வேறு பொருளுக்கேற்ற குறிப்பையும், யாவரும் செய்தற்குரிய எளிய செயல்களே யெனச் செம்பொருளுக்கேற்ற குறிப்பையும் கொண்டது. துட்டமதன்: 123. குணம் எட்டாவன: தன் வயத்தனாதல், தூய உடம்பின்னாதல், இயற்கையுணர்வின்னாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றுலுடைமை, வரம்பிலின்பமுடைமையென்பன (குறள், 9, பரிமேல்.) சிட்டர்கள் - திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் முதலியோர். ஒரு செப்பு - ஒரு சொல் (பிரணவம்); ஒருவகைப் பாத்திரம் என்பது வேறுபொருள்; “ஆங்கவர் செப்பிற் கடங்காது .............. அரங்கத்திருப்பெட் டகத்து ளொருமணியே” (தனிப்.)
|