New Page 1

சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களில் அமைந்த கருத்துச் சுருக்கம்

47

     செ. 9. வேளாளர் மாண்பு, வேளாளர் தம் கையில் தாற்றுக்கோல் பிடிப்பதனால்தான் ஏனையவர்களும் தம் தமக்குரிய கோல் கொண்டுள்ளார் எனல்.  பக்கம் 535-538 

     செ. 10. சேக்கிழாரைப் பலவாறு சிறப்பித்து வருக என அழைத்தல் ;  அவ்வாறு விளிப்பதன் கருத்து.  பக்கம் 539-544

 7. அம்புலிப் பருவம் 

        செய்யுள் 1. அம்புலிப் பருவ விளக்கம், ஏனைய பருவங்கட்கும் இப்பருவத்திற்கும் உள்ள வேறுபாடு, சேக்கிழாரோடு சந்திரனை ஒப்பிடுதல், குன்றத்தூர் மாளிகைகளின் சிறப்பு, சிலேடைப் பொருள் அமைந்திருத்தல்.  இதில் சாம உபாயம் அமைந்துள்ளது.  பக்கம் 545-552 

     செ. 2. சேக்கிழாரோடு சந்திரனை ஒப்பிடுதல், குன்றத்தூர் மாளிகையின் மாண்பு, சந்திரன் அத்திரி முனிவர் விழியில் தோன்றியது. சிலேடை அணி அமைந்த பாடல். இதுவும் சாம உபாயப் பாடல், பக்கம் 552-554

      செ. 3. சேக்கிழாருக்கும் சந்திரனுக்கும் உள்ள வேறுபாடு, இதிலும் சிலேடை அணி அமைந்துளது, இது பேத உபாயம் அமைந்த பாடல்.  பக்கம் 555-561

      செ. 4. நடராசப் பெருமான் திருநடனச் சிறப்பு, அவனே சற்குரு ஆவான்  எனல், குருபகவானிடம் சந்திரன் சாபம் பெற்றது, குன்றத்தூர் மாளிகைகளின் மாண்பு, சேக்கிழார்க்கும், சந்திரனுக்கும் உள்ள வேறுபாடு, இதில் பேத உபாயம் அமைந்துள்ளது.  பக்கம் 562-567

    செ. 5. சேக்கிழார்க்கும், சந்திரனுக்கும் உள்ள வேற்றுமை, சந்திரன் பாபக்கிரகங்களுடன் மாதம் தோறும் உறவு கொள்ளுதல், பன்னிரு ராசிகள், இதில் பேத உபாயம் உளது. பக்கம் 567-571