| 29. | உள்ளும் புறம்பும் உவட்டாத ஆனந்தக் கள்ளருந்தி நின்றதிலே கண்ணுற்றாய்; நெஞ்சமே! |
| | |
| 30. | வாதனை போய், நிட்டையும்போய், மாமௌன ராச்சியம்போய் பேதம்அற நின்ற இடம் பெற்றனையே; நெஞ்சமே! |
| | |
| 31. | இரதம் பிரிந்துகலந்து ஏகமாம் ஆறேபோல் விரகம் தவிர்ந்து அணல்பால் மேவினையே, நெஞ்சமே! |
| | |
| 32. | சோதியான் சூழ்பனிநீர் சூறைகொளும் ஆறேபோல் நீதிகுரு வின்திருத்தாள் நீபெற்றாய்; நெஞ்சமே! |
| | |
| | உடல் கூற்று வண்ணம் குறப்புச் சந்தம் தனதனதான தனதனதான தந்தனந்தன தந்ததனந்தன தனனை தனந்த தனனதனந்த தானன தானன தானனதந்த தந்தனதான தனதானனா |
| | |
| 1. | ஒருமடமாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம் தரும் அன்புபொருந்தி உணர்வுகலங்கி ஒழுகியவிந்து ஊறுசுரோணிதம் மீதுகலந்து- |
| | |
| 2. | பனியில்ஓர் பாதி சிறுதுளிமாது பண்டியில்வந்து புகுந்துதிரண்டு பதும அரும்பு கமடம்இதென்று பார்வைமெய்வாய்செவி கால்கைகள் என்ற- |
| | |
| 3. | உருவமும்ஆகி உயிர்வளர்மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்துமடந்தை உதரம் அகன்று புவியில்வி ழுந்து யோகமும்வாரமும் நாளும் அறிந்து- |
| | |
| 4. | மகளிர்கள் சேனை தரவணையாடை மண்படஉந்தி உதைந்துகவிழ்ந்து மடமயில்கொங்கை அமுதம்அருந்தி ஓரறிவீ ரறி வாகிவளர்ந்து- |