பக்கம் எண் :

172சித்தர் பாடல்கள்

5.ஒளிநகைஊறல் இதழ்மடவாரும் உவந்துமுகந்திட
வந்துதவழ்ந்து மடியில் இருந்து மழலைபொழிந்து
     வாஇருபோவென நாமம்விளம்ப-
  
6.உடைமணி ஆடை அரைவடம் ஆட உண்பவர் தின்பவர்
தங்களொடுஉண்டு தெருவில் இருந்த புழுகி அளைந்து
     தேடியபாலரோ டோடிநடந்து
     அஞ்சுவயதாகி விளையாடியே
  
7.உயர்தருஞான குருஉபதேசம் முத்தமிழின்கலை
யும்கரைகண்டு வளர்பிறைஎன்று பலரும்விளம்ப
     வாழ்பதினாறு பிராயமும்வந்து-
  
8.மயிர்முடிகோதி அறுபதநீல வண்டிமிர் தண்தொடை
கொண்டைபுனைந்து மணிபொன் இலங்கும் பணிகள் அணிந்து
     மாகதர்போகதர் கூடிவணங்க-
  
9.மதன சொரூபன் இவன் எனமோக மங்கையர் கண்டு
மருண்டு திரண்டு வரி விழிகொண்டு சுழிய எறிந்து
     மாமலர் போல் அவர் போவது கண்டு-
  
10.மனது பொறாமல் அவர் பிறகோடி மங்கல செங்கல
சந்திகழ் கொங்கை மருவமயங்கி இதழ் அமுதுண்டு
     தேடியமாமுதல் சேரவழங்கி-
  
11.ஒரு முதலாகி முதுபொருளாய் இருந்ததனங்களும்
வம்பில் இழந்து மதனசுகந்த விதனம்இதென்று
     வாலிபகோலமும் வேறு பிரிந்து-
  
12.வளமையும்மாறி இளமையும்மாறி வன்பல்வி ழுந்துஇரு
கண்கள் இருண்டு வயது முதிர்ந்து நரைதிரை வந்து
     வாதவி ராத குரோதம் அடைந்து-
     செங்கையினில் ஓர் தடியும் ஆகியே
  
13.வருவதுபோவது ஒருமுதுகூனும் மந்தியெனும்படி
குந்தி நடந்து மதியும் அழிந்து செவிதிமிர்வந்து
     வாயறியாமல் விடாமல் மொழிந்து-