பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்173


14.துயில்வரும்நேரம் இருமல் பொறாது தொண்டையும் நெஞ்சமும்
உலர்ந்து வறண்டு துகிலும் இழந்து சுணையும் அழிந்து
     தோகையர் பாலர்கள் கோரணி கொண்டு
  
15.கலியுகமீதில் இவர் மரியாதை கண்டிடும் என்பவர்
சஞ்சலம் மிஞ்ச கலகல என்றுமலசலம் வந்து
     கால்வழி மேல்வழி சாரநடந்து-
  
16.தெளிவும்இராமல் உரை தடுமாறி சிந்தையும் நெஞ்சமும்
உலைந்து மருண்டு திடமும் உலைந்துமிகவும் அலைந்து
     தேறிநல் ஆதரவு ஏதெனநொந்து-
  
17.மறையவன் வேதன் எழுதியவாறு வந்தது கண்டமும்
என்று தெளிந்து இனி என கண்டம் இனியென தொந்தம்
     மேதினி வாழ்வு நிலாதினி நின்ற-
  
18.கடன் முறை பேசும் என உரைநாவுறங்கி விழுந்துகை
கொண்டு மொழிந்துகடைவழிகஞ்சி ஒழுகிட வந்து
     பூதமும் நாலுசு வாசமும் நின்று-
     நெஞ்சுதடுமாறி வரும்நேரமே-
  
19.வளர்பிறை போல எயிறும் உரோமமும் சடையும் சிறு
குஞ்சியும் விஞ்ச மனதும் இருண்ட வடிவும் இலங்க
     மாமலை போல்யம தூதர்கள் வந்து-
  
20.வலைகொடுவீசி உயிர்கொடு போக மைந்தரும் வந்து
குனிந்தழ நொந்து மடியில் விழுந்து மனைவி புலம்ப
     மாழ்கினரே இவர் காலம் அறிந்து-
  
21.பழையவர்காணும் எனும்அயலார்கள் பஞ்சு பறந்திட
நின்றவர் பந்தர் இடுமென வந்து பறையிட முந்த
     வேபிணம் வேக விசாரியும் என்று-
  
22.பலரையும் ஏவி முதியவர் தாமிருந்தசவம் கழு
வும் சிலரென்று பணிதுகில் தொங்கல் களபமணிந்து
     பாவகமே செய்து நாறும் உடம்பை-