பக்கம் எண் :

176சித்தர் பாடல்கள்

விடவே  அனைவரும்  பெருந்துக்கத்தில்  இருந்தனர்.  அவர்களின் துக்கம்
தீர்க்கவும்,  தாம்  பெற்ற  தவ  சக்தியைப்  பரிட்சித்துப் பார்க்கவும் இறந்த
அரசனின் உடலில் புகுந்து அதிசயம் நிகழ்த்தினார். எல்லோருக்கும் மகிழ்ச்சி.

     பிழைத்து  எழுந்த மன்னர்  அருகில் இருந்த  செத்த பாம்பொன்றைக்
கண்டார். பாம்பே! நான் எழுந்து விட்டேன். நீயும் எழுந்திரு என்றார். என்ன
ஆச்சிரியம்;   செத்த  பாம்பு  நெளிந்தது.  அனைவரும்  வியப்படைந்தனர்.
பாம்பு, கூட்டத்தைப் பார்த்துப் பயந்து ஓட முயற்சித்தது.

     மன்னர்  அந்தப்  பாம்பைப்  பார்த்தார்.  பாம்பே எங்கே போகிறாய்.
இறந்துபோன  நீ  இப்பொழுது  எழுந்து  விட்டாய். இன்னுமா உலக ஆசை
உனக்கு  விடவில்லை?   உலக   வாழ்வில்   ஏமாந்து  போகாதே  என்று
சொன்னவர்.    ‘ஆடு  பாம்பே’    என்று   ஆணையிட்டார்.   மன்னரின்
கட்டளைக்குக்   கட்டுப்பட்ட  பாம்பு   மகுடி   வாசிக்காமலேயே   ஆடத்
தொடங்கியது.   பாம்பை    முன்னிலைப்படுத்தி   அற்புதமான   தத்துவப்
பாடல்களைப் பாடத் தொடங்கினார். தான் ஒரு சித்தர் என்பதையும் மன்னர்
உடம்பில் தான் புகுந்திருப்பதையும் குறிப்பாக உணர்த்திப் பாடினார்.

     ஆனால் அவர் பாடியதன் பொருள் யாருக்கும் புரியவில்லை. பிழைத்து
விட்டாரே தவிர, அவருக்குக் கிறுக்கு பிடித்து விட்டது போலும் என்று கூறிக்
கூட்டத்தினர் கலைந்து சென்றனர்.

     மன்னரின்  செயல்கள்  மகாராணிக்கு  ஆச்சரியமாயிருந்தது. முரட்டுப்
பிடிவாதமும்,  பெண்கள் சுகமும்  என்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்த இவர்
எப்படி இப்படி தத்துவ அறிவு பெற்றார் என்று சந்தேகப்பட்டாள்.