பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்179


“ஆசையினால் பாசம் அளவிறந்த கர்மமிது
ஆசைவிட்டுப் போவது அரிதரிது - ஆசை
அறுங்காத லாகி அரனடியைப் போற்றி
உறங்கி உறங்காது இரு”

“தந்தைதாய் பந்துசனம் தாரம் சகோதரர்கள்
விந்துநிலை அறியா வீணரே - விந்து
வெறும் பாழ் என்று எண்ணியே மெய்யுணர்வை நாடி
உறங்கி உறங்காது இரு”

     பாம்பாட்டிச்   சித்தர்   விருத்தாசலத்தில்   சித்தியடைந்ததாகச்  சில
நூல்களும்  துவாரகையில்  சித்தியடைந்ததாக  சில  நூல்களும் கூறுகின்றன.
பாம்பாட்டி  சித்தரின்  பாடல்கள்  பெரும்பாலும்  தாயுமான  சுவாமிகளின்
பாடல்களை  அடியொற்றியே  இருப்பதால்  இவர்  அவரின்  காலத்திற்குப்
பிற்பட்டவராக இருக்கலாம் என்ற முடிவுக்கு வரவேண்டி உள்ளது.

     தாயுமானவரின்  சித்தர்   கனம் பகுதியைப் போலவே இவரும் ‘சித்தர்
வல்லபங்கூறல்’  பகுதியைப்  பாடியுள்ளார்.  இஃதோர்  கலம்பக  உறுப்பாய்
பிரபந்தம் பாடுதலின் பாற்பட்டதாகும்.

     நாங்களெல்லாம் சித்தர் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாவோம். எங்களுக்கு
அபூர்வ சக்திகள் பல உண்டு. அவைகள் என்ன தெரியுமா?

     தூணைச்   சிறுதுரும்பாகத்   தோன்றிடச்   செய்வோம்,   துரும்பைப்
பெருந்தூணாகத்   தோன்றிடச்   செய்வோம்,   ஆணைப்   பெண்ணாகவும்
பெண்ணை  ஆணாகவும்  மாற்றிக்  காட்டுவோம். எட்டுமலைகளைப் பந்தாய்
எடுத்தெறிவோம்,  ஏழுகடல்களையும்  குடித்து, ஏப்பம் விட்டுக் காட்டுவோம்,
வானத்தை வில்லாக வளைத்திடுவோம்,