பக்கம் எண் :

214சித்தர் பாடல்கள்

எல்லையில் கடவு ளெய்தும் பதமுமக்கு
     இல்லையென் றெண்ணுவீர் கோனாரே.
4
  
ஆரண மூலத்தை அன்புடனே பர
     மானந்தக் கோலத்தைப் பன்புடனே
பூரணமாகவே சிந்தித்து மெய்ஞ்ஞானப்
     போதத்தைச் சார்ந்திடு கோனாரே.
5
  
காலா காலங் கடந்திடு சோதியைக்
     கற்பனை கடந்த அற்புதத்தை
நூலாற் பெரியவர் சொன்னநுண் பொருளை
     நோக்கத்திற் காண்பது கோனாரே.
6
  
சொல்லருஞ் சகல நிட்கள மானதைச்
     சொல்லினாற் சொல்லாமல் கோனாரே
அல்லும் பகலு மகத்தி லிருந்திடிற்
     அந்தகன் கிட்டுமோ கோனாரே.
7
  
சூரியன் வாள்பட்ட துய்ய பனிகெடுந்
     தோற்றம்போல் வெவ்வினை தூள்படவே
நாரியிடப்பாகன் தான்நெஞ்சிற்போற்றியே
     நற்கதி சேர்ந்திடும் கோனாரே.
8
  
மும்மலம் நீக்கிட முப்பொறிக் கிட்டாத
     முப்பாழ் கிடந்ததா மப்பாழைச்
செம்மறி யோட்டிய வேலை யமைத்துஞ்
     சிந்தையில் வைப்பீரே கோனாரே.
9
  
பஞ்ச விதமாய்ச் சஞ்சலம் பறக்கப்
பற்ற நின்றதைப் பற்றி யன்பாய்
நெஞ்சத் திருத்தி யிரவு பகலுமே
நேசித்துக் கொள்ளுவீர் கோனாரே.
10
  

நாராயணக்கோன் கூறுதல்

கொச்சகக் கலிப்பா

சீரார் சிவக்கொழுந்தைத் தெள்ளமுதைச் செந்தேனைப்
பாராதி வான்பொருளைப் பஞ்சவுரு வானவொன்றைப்