எல்லையில் கடவு ளெய்தும் பதமுமக்கு இல்லையென் றெண்ணுவீர் கோனாரே. | 4 |
| |
ஆரண மூலத்தை அன்புடனே பர மானந்தக் கோலத்தைப் பன்புடனே பூரணமாகவே சிந்தித்து மெய்ஞ்ஞானப் போதத்தைச் சார்ந்திடு கோனாரே. | 5 |
| |
காலா காலங் கடந்திடு சோதியைக் கற்பனை கடந்த அற்புதத்தை நூலாற் பெரியவர் சொன்னநுண் பொருளை நோக்கத்திற் காண்பது கோனாரே. | 6 |
| |
சொல்லருஞ் சகல நிட்கள மானதைச் சொல்லினாற் சொல்லாமல் கோனாரே அல்லும் பகலு மகத்தி லிருந்திடிற் அந்தகன் கிட்டுமோ கோனாரே. | 7 |
| |
சூரியன் வாள்பட்ட துய்ய பனிகெடுந் தோற்றம்போல் வெவ்வினை தூள்படவே நாரியிடப்பாகன் தான்நெஞ்சிற்போற்றியே நற்கதி சேர்ந்திடும் கோனாரே. | 8 |
| |
மும்மலம் நீக்கிட முப்பொறிக் கிட்டாத முப்பாழ் கிடந்ததா மப்பாழைச் செம்மறி யோட்டிய வேலை யமைத்துஞ் சிந்தையில் வைப்பீரே கோனாரே. | 9 |
| |
பஞ்ச விதமாய்ச் சஞ்சலம் பறக்கப் பற்ற நின்றதைப் பற்றி யன்பாய் நெஞ்சத் திருத்தி யிரவு பகலுமே நேசித்துக் கொள்ளுவீர் கோனாரே. | 10 |
| |
நாராயணக்கோன் கூறுதல் கொச்சகக் கலிப்பா சீரார் சிவக்கொழுந்தைத் தெள்ளமுதைச் செந்தேனைப் பாராதி வான்பொருளைப் பஞ்சவுரு வானவொன்றைப் | |