காற்றின் மரமுறியுங் காட்சியைப்போல் நல்லறிவு தூற்றிவிடி லஞ்ஞானந் தூரப்போம் மடவனமே. | 91 |
| | |
அக்கினியால் பஞ்சுபொதி அழிந்திட்ட வாறேபோல் பக்குநல் லறிவாலே பாவம் போம் மடவனமே. | 92 |
| | |
குளவிபுழு வைக்கொணர்ந்து கூட்டிலுருப் படுத்தல்போல் வளமுடைய வன்மனத்தை வசப்படுத்து மடவனமே. | 93 |
| | |
அப்புடனே யுப்புச்சேர்ந் துளவுசரி யானதுபோல் ஒப்புறவே பிரமமுட னொன்றிநில்லு மடவனமே. | 94 |
| | |
காய்ந்த இரும்புநிறங் காட்டுதல்போல் ஆத்துமத்தை வாய்ந்திலங்கச் செய்து வளம்பெறுநீ மடவனமே. | 95 |
| | |
புல்லாங்குழலூதல் கண்ணிகள் தொல்லைப்பிறவி தொலைக்கார்க்கு முத்திதான் இல்லையென் றூதுகுழல் - கோனே இல்லையென் றூதுகுழல். | 96 |
| | |
இந்திர போகங்கள் எய்தினுந் தொல்லையென் அந்தமா யூதுகுழல் - கோனே அந்தமா யூதுகுழல். | 97 |
| | |
மோன நிலையினில் முத்தியுண் டாமென்றே கானமா யூதுகுழல் - கோனே கானமா யூதுகுழல். | 98 |
| | |
நாற்போற் பொறிகளை நாநாவிதம் விட்டோர் பேயரென் றூதுகுழல் - கோனே பேயரென் றூதுகுழல். | 99 |
| | |
ஓடித் திரிவோர்க் குணர்வுகிட் டும்படி சாடியே யூதுகுழல் - கோனே சாடியே யூதுகுழல். | 100 |