பக்கம் எண் :

248சித்தர் பாடல்கள்

அப்புட னுப்பெனவே                         அகப்பேய்
     ஆராய்ந் திருப்பாயே.
81
  
மோட்சம் வேண்டார்கள்                      அகப்பேய்
     முத்தியும் வேண்டார்கள்
தீட்சை வேண்டார்கள்                        அகப்பேய்
     சின்மய மானவர்கள்.
82
  
பாலன் பிசாசமடி                            அகப்பேய்
     பார்த்தால் பித்தனடி
கால மூன்றுமல்ல                            அகப்பேய்
     காரிய மல்லவடி.
83
  
கண்டது மில்லையடி                          அகப்பேய்
     கண்டவ ருண்டானால்
உண்டது வேண்டடியோ                       அகப்பேய்
     உன்னாணை சொன்னேனே.
84
  
அஞ்சையு முண்ணாதே                        அகப்பேய்
     ஆசையும் வேண்டாதே
நெஞ்சையும் விட்டுவிடு                        அகப்பேய்
     நிஷ்டையிற் சாராதே.
85
  
நாதாந்த வுண்மையிலே                       அகப்பேய்
     நாடாதே சொன்னேனே
மீதான சூதானம்                             அகப்பேய்
     மெய்யென்று நம்பாதே.
86
  
ஒன்றோ டொன்றுகூடில்                       அகப்பேய்
     ஒன்றுங் கெடுங்காணே
நின்ற பரசிவமும்                             அகப்பேய்
     நில்லாது கண்டாயே.
87
  
தோன்றும் வினைகளெல்லாம்                  அகப்பேய்
     சூனியங் கண்டாயே
தோன்றாமற் றோன்றிடும்                     அகப்பேய்
     சுத்த வெளிதனிலே.
88