அப்புட னுப்பெனவே அகப்பேய் ஆராய்ந் திருப்பாயே. | 81 |
| |
மோட்சம் வேண்டார்கள் அகப்பேய் முத்தியும் வேண்டார்கள் தீட்சை வேண்டார்கள் அகப்பேய் சின்மய மானவர்கள். | 82 |
| |
பாலன் பிசாசமடி அகப்பேய் பார்த்தால் பித்தனடி கால மூன்றுமல்ல அகப்பேய் காரிய மல்லவடி. | 83 |
| |
கண்டது மில்லையடி அகப்பேய் கண்டவ ருண்டானால் உண்டது வேண்டடியோ அகப்பேய் உன்னாணை சொன்னேனே. | 84 |
| |
அஞ்சையு முண்ணாதே அகப்பேய் ஆசையும் வேண்டாதே நெஞ்சையும் விட்டுவிடு அகப்பேய் நிஷ்டையிற் சாராதே. | 85 |
| |
நாதாந்த வுண்மையிலே அகப்பேய் நாடாதே சொன்னேனே மீதான சூதானம் அகப்பேய் மெய்யென்று நம்பாதே. | 86 |
| |
ஒன்றோ டொன்றுகூடில் அகப்பேய் ஒன்றுங் கெடுங்காணே நின்ற பரசிவமும் அகப்பேய் நில்லாது கண்டாயே. | 87 |
| |
தோன்றும் வினைகளெல்லாம் அகப்பேய் சூனியங் கண்டாயே தோன்றாமற் றோன்றிடும் அகப்பேய் சுத்த வெளிதனிலே. | 88 |