பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்275


தன்பாவம் நீக்காத தன்மயர் மற்றவர்
     வன்பாவம் நீக்குவரோ? குதம்பாய்
     வன்பாவம் நீக்குவரோ?
200
  
வேள்வியில் ஆட்டினை வேவச்செய்து உண்போர்க்கு
     மீள்வழி இல்லையடி குதம்பாய்
     மீள்வழி இல்லையடி.
201
  
வேதம் புராணம் விளங்கிய சாத்திரம்
     போதனை ஆகுமடி குதம்பாய்
     போதனை ஆகுமடி.
202
  
யாகாதி கன்மங்கள் யாவும் சடங்குகள்
     ஆகாத செய்கையடி குதம்பாய்
     ஆகாத செய்கையடி.
203
  
சாற்றும் சகுணங்கள் சந்தியா வந்தனம்
     போற்றும் அறிவீனமே குதம்பாய்
     போற்றும் அறிவீனமே.
204
  
ஆனதோர் நாள் என்றல் ஆகாத நாள் என்றல்
     ஞானம்இல் லாமையடி குதம்பாய்
     ஞானம்இல் லாமையடி.
205
  
அஞ்சனம் என்றது தறியாமல் ஏய்க்குதல்
     வஞ்சனை ஆகுமடி குதம்பாய்
     வஞ்சனை ஆகுமடி.
206
  
மாய வித்தை பல மாநிலத்தில் செய்கை
     தீய தொழி லாமடி குதம்பாய்
     தீய தொழி லாமடி.
207
  
கருவை அழித்துக் கன் மத்தொழில் செய்குதல்
     திருவை அழிக்குமடி குதம்பாய்
     திருவை அழிக்குமடி.
208
  
மாரணஞ் செய்துபல் மாந்தரைக் கொல்வது
     சூரணம் ஆக்குமடி குதம்பாய்
     சூரணம் ஆக்குமடி.
209