தன்பாவம் நீக்காத தன்மயர் மற்றவர் வன்பாவம் நீக்குவரோ? குதம்பாய் வன்பாவம் நீக்குவரோ? | 200 |
| |
வேள்வியில் ஆட்டினை வேவச்செய்து உண்போர்க்கு மீள்வழி இல்லையடி குதம்பாய் மீள்வழி இல்லையடி. | 201 |
| |
வேதம் புராணம் விளங்கிய சாத்திரம் போதனை ஆகுமடி குதம்பாய் போதனை ஆகுமடி. | 202 |
| |
யாகாதி கன்மங்கள் யாவும் சடங்குகள் ஆகாத செய்கையடி குதம்பாய் ஆகாத செய்கையடி. | 203 |
| |
சாற்றும் சகுணங்கள் சந்தியா வந்தனம் போற்றும் அறிவீனமே குதம்பாய் போற்றும் அறிவீனமே. | 204 |
| |
ஆனதோர் நாள் என்றல் ஆகாத நாள் என்றல் ஞானம்இல் லாமையடி குதம்பாய் ஞானம்இல் லாமையடி. | 205 |
| |
அஞ்சனம் என்றது தறியாமல் ஏய்க்குதல் வஞ்சனை ஆகுமடி குதம்பாய் வஞ்சனை ஆகுமடி. | 206 |
| |
மாய வித்தை பல மாநிலத்தில் செய்கை தீய தொழி லாமடி குதம்பாய் தீய தொழி லாமடி. | 207 |
| |
கருவை அழித்துக் கன் மத்தொழில் செய்குதல் திருவை அழிக்குமடி குதம்பாய் திருவை அழிக்குமடி. | 208 |
| |
மாரணஞ் செய்துபல் மாந்தரைக் கொல்வது சூரணம் ஆக்குமடி குதம்பாய் சூரணம் ஆக்குமடி. | 209 |