அஞ்ஞானங் கடிதல் மீளா வியாதியில் மேன்மேலும் நொந்தார்க்கு நாளேது கோளேதடி குதம்பாய் நாளேது கோளேதடி. | 191 |
| |
தீட்டால் உடம்பு திறங்கொண்டிருக்கையில் தீட்டென்று சொல்வதென்னை? குதம்பாய் தீட்டென்று சொல்வதென்னை? | 192 |
| |
செத்தபின் சாப்பறை செத்தார்க்குச் சேவித்தால் சத்தம் அறிவாரடி குதம்பாய் சத்தம் அறிவாரடி. | 193 |
| |
தந்தைதாய் செய்வினை சந்ததிக்கு ஆமென்பார் சிந்தை தெளிந்திலரே குதம்பாய் சிந்தை தெளிந்திலரே. | 194 |
| |
பிள்ளைகள் செய்தன்மம் பெற்றோர்க்கு உறுமென்றால் வெள்ளறி வாகுமடி குதம்பாய் வெள்ளறி வாகுமடி. | 195 |
| |
பந்தவினைக்கு ஈடாடிப் பாரிற் பிறந்தோர்க்குச் சொந்தமது இல்லையடி குதம்பாய் சொந்தமது இல்லையடி. | 196 |
| |
பார்ப்பார் சடங்கு பலனின்று பாரிலே தீர்ப்பாக எண்ணிடுவாய் குதம்பாய் தீர்ப்பாக எண்ணிடுவாய். | 197 |
| |
அந்தணர்க்கு ஆவை அளித்தோர்கள் ஆவிக்குச் சொந்தமோ முத்தியடி குதம்பாய் சொந்தமோ முத்தியடி. | 198 |
| |
வேதியர் கட்டிய வீணான வேதத்தைச் சோதித்துத் தள்ளடியோ குதம்பாய் சோதித்துத் தள்ளடியோ. | 199 |